(வவுனியா, ஈழம்)
முதன் முறையாக இந்த ஆண்டு கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதிவியில் இருந்து விலகுமாறு கோரி, ஒரு மாதத்திற்கும் மேலாகக் கொழும்பு காலிமுகத்திடலில் போராடி வரும் இளைஞர்கள், இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளனர். சிங்கள இளைஞர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பினரும் நிகழ்வில் பங்குகொண்டனர். காலிமுகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வில் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.