நிரல்
ஜூன் 23 21:33

இந்திய உயர்மட்டத் தூதுக்குழு கோட்டா, ரணில் ஆகியோருடன் உரையாடல்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஆராய்வதற்கு கொழும்புக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாட்ரா உள்ளிட்ட தூதுகுழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாட்ரா, இந்திய பிரதான பொருளாதார ஆலோசகர் வீ. ஆனந்த் நாகேஸ்வரன் மற்றும் இந்திய பொருளாதார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் வியாழக்கிழமை கொழும்பை வந்தடைந்தனர்.
ஜூன் 22 21:42

பாரிய பொருளாதார நெருக்கடி- ரணில் எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஜூலை மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை வழங்கினாலும் அந்த உதவிகள் போதுமானதல்ல. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்தி நெருக்கடியைச் சமாளிப்பதே இலங்கைக்குத் தற்போதுள்ள ஒரேயொரு வழி என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
ஜூன் 21 22:04

மாகாணங்கள் சமஸ்டி ஆட்சியைக் கோரும் நிலை உருவாகுமென்கிறார் சரத் வீரசேகரா

(வவுனியா, ஈழம்) பௌத்த சிங்களவர்கள் இலங்கையின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் குடியேறுவார்களென்று முன்னாள் இராணுவ உயர் அதிகாரியும், முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த சின்னங்கள் இருந்ததாலேயே அங்கு புத்த விகாரை அமைக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் குண்டர்களைப் பயன்படுத்தி அதனைத் தடுப்பதாகவும் கூறினார்.
ஜூன் 21 21:34

நொச்சிக்குளம் இரட்டைக்கொலை குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸார் விசாரணை

வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் நொச்சிக்குளத்தில் நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடர்பான புலன் விசாரணைகள் அனைத்தும் மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் சி.பி. ஜெயதிலக்க கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். குறித்த பொலிஸ் பிரிவினரால் கடந்த 15ஆம் திகதி முருங்கன் காட்டுப்பகுதியில் இருவரும், கடந்த 16ஆம் திகதி யாழ் நகரில் ஐவரும் என இதுவரை ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூன் 20 22:07

21 ஆவது திருத்தச் சட்ட நகல்வரைபு அமைச்சரவையில் அங்கீகாரம்

(வவுனியா, ஈழம்) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள் பலவற்றை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்தும் 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நகல்வரைபைச் சமர்ப்பித்திருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வாதப்பிரதிவாதங்களுடன் நகல் வரைபு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 19 14:34

பீரிஸின் திரிபுபடுத்திய ஜெனீவா உரைக்குக் கண்டனம் தெரிவித்து யாழ் ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவப் பொம்மையை எரித்து யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் கள அலுவலகத்திற்கு முன்னால் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் இடம்பெற்றது. ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் ஐம்பதாவது அமர்வில் உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஐ.நா.விடம் கையளிக்கப்பட்டிருந்த முறைப்பாடுகளில் தொடர்புடைய குடும்பங்களில் 83 வீதத்துக்கும் அதிகமானவா்களைச் சந்தித்து விபரங்களை உறுதிப்படுத்தும் வேலைகள் நடைபெற்றுள்ளதாகத் திரிபுபடுத்திக் கூறியிருந்தார்.
ஜூன் 17 18:04

பீரிஸின் ஜெனீவா உரைக்கு எதிராக யாழ் நகரில் போராட்ட அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஐம்பதாவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய உரைக்குக் கண்டனம் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர்களின் பிரச்சினையைத் திசை திருப்பும் பணிகளில் கவனம் செலுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜூன் 16 00:05

பொருண்மிய நெருக்கடியையும் பயன்படுத்திப் பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கையை முற்றாக விடுவிக்க பீரிஸ் முழு முயற்சி

(கிளிநொச்சி, ஈழம்) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்குள், ஈழத்தமிழர் விவகாரத்தை ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையில் இருந்து கனகச்சிதமாக நீக்கிவிடச் செய்யும் முனைப்பில், உண்மைக்கு மாறான திரிபுபடுத்திய தகவல்களை ஐம்பதாவது கூட்டத் தொடரில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 13 ஜூன் திங்களன்று உரையாற்றும்போது முன்வைத்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை வகிக்கும் பின்னணியில், சா்வதேச தரப்புகள் தமது வாதங்களை 2002 பேச்சுவார்த்தைக் காலத்தைப்போல நம்பும் என்ற எதிர்பார்ப்போடு அமைச்சர் பீரிஸ் பொறுப்புக்கூறல், சாட்சியப் பொறிமுறை பற்றிய கருத்துகளை கடும் தொனியில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது முன்னரைப் போலன்றி இம்முறை ஈழத்தமிழர்களுக்கு மிக ஆபத்தான வியூகமாகிறது.
ஜூன் 14 22:46

எரிபொருள் தட்டுப்பாடு- வெள்ளிமுதல் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்

(வவுனியா, ஈழம்) எரிபொருள் தட்டுப்பாடுகளினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாதென இலங்கைத் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுன விஜயரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றும் இல்லையேல் மே மாதம் ஒன்பதாம் திகதி நடைபெற்ற வன்முறைகளைவிடக் கூடுதல் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெறலாமெனவும் அவர் கூறினார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கெமுன விஜயரட்ன விளக்கமளித்தார்.
ஜூன் 13 22:27

ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் இந்திய எதிர்ப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அமெரிக்க- இந்திய அரசுகள் தமது புவிசார் நலன்களைப் பெறும் திட்டங்களையே செயற்படுத்த முற்படுகின்றன என்பதை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின்போது அறிந்துகொள்ள முடிந்தது. இலங்கைத்தீவில் மின் சக்தி எரிசக்தித் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்திடம் கையளிக்கும் யோசனைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நேரடியாக எதிர்ப்பு வெளியிடவில்லை. ஆனாலும் அதானி நிறுவனம் தொடர்பாக சஜித் பிரேமதாசாவின் கட்சி முன்வைக்கும் விமர்சனம், இந்தியாவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற செய்தியைப் பகிரங்கப்படுத்துகின்றது.