(மன்னார், ஈழம்)
வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகள் உள்ளூர் மற்றும் இந்தியக் கடத்தல் நடவடிக்கைகளுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து சூசகமாகப் பல வகையான பொருட்கள் சட்டவிரோதமாக மன்னார் கரையோர பகுதிகளுக்கு தினமும் எடுத்து வரப்படுவதாக தலைமன்னார் பொலிஸார் கூறுகின்றனர். இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தமிழர் தாயகமான மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடித்தொழில் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.