நிரல்
செப். 21 09:24

புலம்பெயர் இலங்கையர்களா, புலம்பெயர் தமிழர்களா?

(வவுனியா, ஈழம்) புலம்பெயர் தமிழர்கள் என்பது தற்போது புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்று இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மிக நுட்பமாக (Very subtle) மடைமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. லண்டனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் புலம்பெயர் பிரதிநிதிகளைச் சந்தித்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் தமிழ் அமைப்புகளையும் சேர்த்தே சிங்கள - ஆங்கில ஊடகங்கள் புலம்பெயர் இலங்கையர்கள் என்று சித்தரிக்கின்றன. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினார்களா இல்லையா என்பதைப் புலம்பெயர் அமைப்புகள் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவை லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருந்ததாகத் தெரியவில்லை.
செப். 20 08:23

பொறுப்புகளில் இருந்து சம்பந்தனை நீக்க குழு நியமனம்

(வவுனியா, ஈழம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவினால் சமீபகாலமாக அரசியலில் இருந்து ஓய்வெடுத்துள்ளார். இதனால் அவரைப் பக்குவமான முறையில் பதவிகளில் இருந்து நீக்குவதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் திங்கட்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றியில் இருந்து நீக்குவதற்கே திர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
செப். 19 23:03

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- எதிர்க்கட்சிகள் கண்டனம்

(வவுனியா, ஈழம்) அமைச்சர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படுவது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியினால் இலங்கை மீள எழும்ப முடியாத நிலையில் இருக்கும் போது அமைச்சர்களின் எண்ணிக்கை அவசியமற்றது என கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டு தசம் ஒன்பது பில்லியன்களை வழங்கப் பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
செப். 18 09:25

இலங்கைத்தீவு விவகாரம் குறித்த இந்திய அணுகுமுறையும், அமெரிக்க நிலைப்பாடும்

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்த இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியை வழங்கவும், மேலதிகமான கடன்களைக் கொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடுகின்றது. ஆனாலும், தொடர்ந்து இலங்கைக்குக் கடன் வழங்குவதில் இழுபறிகள் உண்டு என்பதைச் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன. அதாவது இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட இந்தோ பசுபிக் பிராந்தியப் புவிசார் அரசியல் போட்டிகளே இதற்குப் பிரதான காரணம். இலங்கையின் கடன்களில் மூன்றில் இரண்டு பங்கு சீனா வழங்கிய கடன்களாகும்.
செப். 16 22:25

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை முன்னிலையாகுமாறு கொழும்புக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மைத்திரிபால சிறிசேன முன்னிலையாக வேண்டும்.
செப். 15 20:33

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இல்லை

(வவுனியா, ஈழம்) வட மாகாணத்தின் மன்னாரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்துச் செய்யக்கோரி பொதுமக்களின் கையெழுத்துகளைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. புதன்கிழமை மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த கையெழுத்துகளைப் பெரும் பணிகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர் முன்னணி மற்றும் சர்வஜன நீதி அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வாகனப் பவனி மூலம் பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறும் நடவடிக்கைகள் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செப். 14 21:31

உள்ளக விசாரணையை வலியுறுத்தும் ஜெனீவாத் தீர்மானம்- உறுப்பு நாடுகளிடம் வரைபு கையளிப்பு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புச் சட்டதிட்டங்களின் படி சர்வதேச தரத்திலான விசாரணைக்கு ஏற்றவாறு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளை வலுப்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டு வரும் தீர்மானத்தின் பிரதிகள், தற்போது இலங்கை விவகாரம் தொடர்பான கருக்குழு நாடுகளிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன. விசாரணையின்போது சர்வதேசத் தொழில்நுட்ப உதவிகளுக்குரிய ஒத்துழைப்புகளைப் பெற வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆறு பக்கங்களில் குறித்த தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
செப். 13 08:03

நிதியைப் பெற கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சந்தேகங்களைக் கிளப்பி வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் அதனை மறுத்துள்ளது. குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் உள்ள கணக்காய்வுக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். ஆயிரக்கனக்கான அரச ஊழியர்களைக் கட்டாய விடுமுறையில் அனுப்ப வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை பெரும் நிதிச் சுமை எனவும் அமைச்சர் கூறினார்.
செப். 12 10:39

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் 46/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை ஜெனீவா மனித உரிமைச் சபையின் 52 ஆவது அமர்வு ஆரம்பமாகியபோது இலங்கை விவகாரம் தொடர்பான பரஸ்பர உரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். சுயாதீன உள்நாட்டுப் பொறிமுறையை வலுப்படுத்தத் தேவையான ஆதரவு மற்றும் வளங்களை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமெனவும் அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
செப். 10 22:22

ரணில் அரசாங்கத்துக்கு எதிராக பௌத்த குருமார் ஆர்ப்பாட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிராகக் கொழும்பில் பௌத்த குருமார் மாபெரும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே, சிறிதர்ம தேரர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவே பௌத்த குருமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். கொழும்பு ஸ்ரீ போதிராஜா மாவத்தையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படுமென பௌத்த குருமார் கூறியுள்ளனர். சனிக்கிழமையும் பௌத்த குருமாரின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.