செப். 18 09:25
(வவுனியா, ஈழம்)
சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்த இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியை வழங்கவும், மேலதிகமான கடன்களைக் கொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடுகின்றது. ஆனாலும், தொடர்ந்து இலங்கைக்குக் கடன் வழங்குவதில் இழுபறிகள் உண்டு என்பதைச் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன. அதாவது இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட இந்தோ பசுபிக் பிராந்தியப் புவிசார் அரசியல் போட்டிகளே இதற்குப் பிரதான காரணம். இலங்கையின் கடன்களில் மூன்றில் இரண்டு பங்கு சீனா வழங்கிய கடன்களாகும்.