நவ. 16 09:36
(முல்லைத்தீவு)
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை அறவழியில் தொடர்ந்து முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கைக்குச் சென்றிருந்தது. ஆனால் அதனை ஒழுங்குமுறையில் கொண்டு செல்ல முடியாமல், சிதறவைத்துக் கையாளப்படும் சக்திகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை பங்களிப்பு வழங்க வேண்டுமெனச் சம்பந்தன் கேட்டிருக்கிறார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அருகில் இருந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தாமல், கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட பலர் வெளியேறிய நிலையில், தற்போது ஐ.நாவை நாடுகிறார் சம்பந்தன்.