நவ. 24 22:44
(கிளிநொச்சி, ஈழம்)
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் தந்தையாரான ஏ,டி.ராஜபக்சவின் ஐம்பத்து ஐந்தாவது நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்கள் பங்குபற்றியபோதும் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை. வியாழக்கிழமை கொழும்பு நகர மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச பங்குபற்றுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஊடகம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.