ஜன. 19 21:20
(வவுனியா, ஈழம்)
வடக்குக் கிழக்கு உட்பட இலங்கைத்தீவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேர்தலைக் கண்காணிக்கும பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி றோகன ஹெட்டியாராட்சி தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அவர், உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம முறையிட்டுள்ளதாகவும் கூறினார்.அச்சறுத்தல்களுக்கு உள்ளான அதிகாரிகளுக்கப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுதந்திரமாகத் தேர்தல் கடமைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் றோகன ஹெட்டியாராட்சி வேண்டுகோள் விடுத்துளார்.