நிரல்
மார்ச் 02 21:23

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை இறுதி முடிவு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இறுதி முடிவு எடுக்கும் என்றும், அதன் பின்னர் அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் ஒன்பதாம் திகதி நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழு முன்னதாக கூறியிருந்தது. ஆனாலும் நிதி இல்லையென நிதியமைச்சின் செயலாளர் அறிவித்ததனால் தேர்தலை நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவிவித்திருந்து.
பெப். 28 09:17

மின் கட்டணம், வரி உயர்வுக்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டம்

(வவுனியா, ஈழம்) மின்சாரக் கட்டணம் அறுபத்து ஆறு வீதத்தினால் உயர்வடைந்துள்ளமை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமைக்கு மற்றும் வரி அதிகரிப்புக்கு எதிராக நாளை புதன்கிழமை கொழும்பில் அனைத்துத் தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அரச மற்றும் தனியார் வங்கிகள் தனியார் அரச மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் போராட்டம் தொடர்பாகத் தொழிற்சங்க அமைப்புகள் ஊடகங்களில் பகிரங்க அறிவிப்பு வெளியிடவில்;லை.
பெப். 27 21:06

இலங்கை பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஜே.வி.பி வேட்பாளர் பலி

(வவுனியா, ஈழம்) உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்படவுள்ளமைக்கு எதிராக ஜே.வி.பி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கக் கலகமடக்கும் பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் குண்டாந்தடியடி ஆகியவற்றில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜே.வி.பியின் நிவித்திகல பிரதேச சபை வேட்பாளரான நிமல் அமரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார்.
பெப். 26 20:27

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்ய முடிவு

(கிளிநொச்சி, ஈழம்) உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்க நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றத்தில் மனுச் செய்யவுள்ளதாக ஜே.வி.பியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. எதிர்வரும் தினங்களில் இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்படும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பாக ஜனாதிபதிக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெப். 25 23:04

குர்திஸ்தான் மக்களுக்கு நேர்ந்த அவலம்- புலம்பெயா் தமிழர்களுக்கு பாடம்!

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் இராணுவ ரீதியில் அதி உச்சத் தொடர் வெற்றிகளைக் கண்டுகொண்டிருந்த பின்னணியிலேதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2001 இல் உருவாக்கப்பட்டது. இன விடுதலைக்கான போராட்ட அரசியல் என்பது தனித்து இயங்கும் ஒன்று அல்ல. எந்தவொரு போராட்டத்துக்கும் அரசியற் காரண காரியங்கள் உண்டு. இராணுவ ரீதியிலான போராட்டத்தின் வெற்றி ஒரு கட்டத்தை மேம்படுத்தும் போது, அதற்கு அடுத்த கட்டமாக அரசியல் ரீதியான அதுவும் ஜனநாயக விழுமியங்களைப் பேணக் கூடிய நெறி முறைகளை நுட்பமாகக் கையாள வேண்டியது அவசியமானது. அதனை மையமாகக் கொண்டே விடுதலைப் புலிகள் 2001 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்துக்கான சமிக்ஞையைக் கொடுத்தனர்.
பெப். 23 10:57

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்குமா?

(கிளிநொச்சி, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அரச ஊழியர் மட்டத்தில் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டு தசம் ஒன்பது பில்லியன்களை எதிர்வரும் மார்ச் மாதம் பெற இலங்கை அரசாங்கம் கடும் முயற்சி எடுத்து வருவதாக கொழும்பில் உள்ள நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் நான்கு அதிகாரபூர்வ கலந்துரையாடல்களையும், மேலும் இரண்டு ஊழியர் மட்ட உரையாடல்களையும் நடத்தியுள்ளதாகக் கூறியுள்ள நிதியமைச்சின் அதிகாரி ஒருவர், சீனா கடன் மறுசீரமைப்பு விடயத்தில் நம்பிக்கை தரும்படியான பதில் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பெப். 22 08:00

மார்ச் மாதத்தில் அரசாங்கத்துக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்படும் - அமைச்சர் பந்துல அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை அரசாங்கத்துக்கு, மார்ச் மாதத்தில் மட்டும் தாங்கிக்கொள்ள முடியாத கடன் சுமை இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன அமைச்சரவைக்கு அறியத்தந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, மார்ச் மாதத்தில், அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானம் 173 பில்லியன் ரூபா. ஆனால் இது போதுமானதல்ல என்றார்.
பெப். 21 07:59

தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம்- பேராயர் பகிரங்க அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) பொது மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்படைந்து வருவதால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்காமல் தேர்தலை நடத்தி மக்களின் விருப்பங்களை அறிய வேண்டுமென இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு பொரள்ளையில் உள்ள பேராயர் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ பேராயர் மல்கம் ரஞ்சித்தின் அறிவிப்பை பகிரங்கப்படுத்தினார்.
பெப். 19 07:06

கம்பன் விழா, தமிழ்த்தேசியத்தை கருவறுக்கும் முயற்சியில்!

(வவுனியா, ஈழம்) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கம்பன் விழா, ஈழத்தமிழர் பண்பாடு, தமிழ் மரபுரிமை மற்றும் ஈழத்தமிழ் சைவப் பண்பாட்டை உணர்த்தி நடத்தப்பட்டதா அல்லது வட இந்திய புனை கதைகளுக்கும் அதன் வழி வந்த பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ந்ததா என்பதை விழாவில் பங்குபற்றியோர் புரிந்திருப்பர். "அறிவுடை அமைச்சனாக வள்ளுவ நெறிப்படி நின்றவன் சுமந்திரனா அனுமனா" என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதத்தில் ஈழத்தமிழர் தொடர்பாகப் பேராசிரியர் வரதராஜன் ஸ்ரீபிரசாந்தன் மற்றும் ஆசிரியரும், பேச்சாளருமான செல்வவடிவேல் ஆகியோர் இரண்டு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளனர்.
பெப். 17 20:47

உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுக்குரிய நிதியை வழங்க முடியாதென நிதியமைச்சு அறிவிப்பு

இலங்கைத்தீவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுகளுக்குரிய நிதியை வழங்க முடியாதென நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், நிதியமைச்சின் செயலாளர் நிதியை வழங்க முடியாதெனக் கூறியதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.