நவ. 15 21:50
(முல்லைத்தீவு, ஈழம்)
இலங்கை அரசியல் நெருக்கடி நீடித்துச் செல்லும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான அரசியல் கட்சித் தலைவர்களோடு கலந்துரையாடி வருகின்றார். இன்று மாலை இடம்பெற்ற இரண்டு சந்திப்புக்களிலும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஜே.வி.பி, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான சிறிய கட்சிகள் கலந்துகொண்ட சந்திப்பில், நாடாளுமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பேசப்பட்ட விடயங்கள் எதனையும் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களும் ஊடகங்களுக்கு கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.