செய்தி: நிரல்
டிச. 11 12:17

இந்திய ஒன்றியத்தின் 5 மாநிலத் தேர்தல் - பெரும் பின்னடைவைச் சந்திக்கிறது பாஜக!

(சென்னை, தமிழ்நாடு) 2019 இல் இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறச் சூழலில், 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பின்னடவைச் சந்தித்திருகிறது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை இழக்கிறது. 15 ஆண்டுகளாக கோலோச்சிய மத்தியப் பிரதேச மாநிலத்தில் முந்தையக் காலக்கட்டத்தை விட குறைந்த எண்ணிகையிலான இடத்தையே பாஜக பெற்றுள்ளது. வடகிழக்கு மாகாணத்தில், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கிறது. 1956 முதல் 1986 வரை கிளர்ச்சிப் படையாக இருந்து, இந்திய ஒன்றிய அரசுடனான ஒப்பந்தத்தில் பேரில் தேர்தல் பாதைக்கு திரும்பியது இக்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது!
டிச. 11 11:53

சுன்னாகத்தில் பொலிஸாருக்கு வழங்க மறுத்த காணியில் உள்ள உடற்பயிற்சி நிலையம் மீது தாக்குதல் - பொருட்களும் தீக்கிரை

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரின் போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் மக்களது பூர்வீக நிலங்கள் இலங்கை இராணுவம் உட்பட அரச தரப்பினரால் அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்கு பொதுமகன் ஒருவரது காணியை சுவீகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து, நேற்று திங்கட்கிழமை இரவு குறித்த காணியில் இயங்கிவரும் உடற்பயிற்சி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அங்கிருந்த பொருட்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
டிச. 10 22:07

மன்னார் போர்க்கால புதைகுழியில் இருந்து மேலும் பல எலும்புக் கூடுகள் மீட்பு - அகழ்வுப் பணி தொடர்கிறது

(மன்னார், ஈழம்) மன்னார் நகர நுழைவாசலில் கண்டுபிடிக்கப்பட்ட போரக்கால மனிதப் புதைகுழியில் இருந்து இன்று வரை 266 எலும்புகள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றில் 260 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை 114 ஆவது நாளாகவும் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன. கடந்த வாரம் மன்னார் சதொச மனிதப் புதைகுழியிலிருந்து விலங்கிடப்பட்டவாறு மீட்கப்பட்ட மனிதக் கால் எலும்புகள் மன்னார் நீதிமன்ற உத்தரவின்படி இலங்கைப் பொலிஸாரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் புதைகுழியிலிருந்து தங்க முலாமிடப்பட்ட பெண்கள் அணியும் மோதிரம் ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது.
டிச. 10 16:09

கொழும்பு - மோதரை பகுதியில் துப்பாக்கிச்சூடு - பெண் உட்பட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

(கிளிநொச்சி, ஈழம்) கொழும்பு -மட்டக்குழிய மோதரை பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியேட்சகர் ருவான் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்தோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சம்பவ இடத்திற்குச் சென்ற மோதர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்காண காரணங்கள் தெரியவில்லை என்றும் பாதாளஉலக குழுவின் கைவரிசையாக இருக்கலாம் எனவும் மோத பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
டிச. 10 14:32

காணிகளுக்கான உரிமைப்பத்திரங்கள் மற்றும் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளைக் கோரி மூதூரில் போராட்டம்

(திருகோணமலை, ஈழம்) கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று இலங்கை இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறும் தமக்காக காணி உரிமைப் பத்திரங்களை வழங்குமாறும் வலியுறுத்தி கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மூதூர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. மூதூரிலுள்ள சம்பூர் - கங்குவேலி படுகாடு காணிகளுக்கான ஆவணங்களை வழங்குமாறு வலியுறுத்தி மூதூர் பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று காலை ஜனநாயக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பொது மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.