டிச. 15 10:45
(அம்பாறை, ஈழம்)
மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தால் இலங்கையில் ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தமைக்கு இலங்கை நீத்தித்துறையின் சுயாதீனமான செயற்பாடுதான் காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் கூறியுள்ளார். அத்துடன் மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், ஆகியவற்றின் செயற்பாடுகளும் பிரதான காரணம் எனவும் அவர் தனது ருவிட்டர் பதிவில் கூறியுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான இலங்கை அரச வர்த்தமானி அறிவிப்பு அரசியல் யாப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்டு இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.