நிரல்
பெப். 14 12:23

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு மதுபானசாலைகள் மாத்திரமே உள்ளன - மாவட்ட செயலகம் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு மதுபானசாலைகள் மாத்திரமே உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கூர்மையின் கிளிநொச்சி செய்தியாளர் முன்வைத்த விண்ணப்பத்துக்கு வழங்கிய பதிலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெப். 13 23:16

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் சந்திரிக்கா - சமகால அரசியல் பற்றி இருவரும் உரையாடினர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியமைப்பார் என இந்தியா எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று புதன்கிழமை இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடியுள்ளார். புதுடில்லியில் உள்ள இந்தியப் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் எதுவும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. ஆனால் சந்திப்பு நடைபெற்றதாக சந்திரிக்காவின் ஊடகத் தொடர்பாளர் கொழும்பில் கூறியுள்ளார்.
பெப். 13 09:13

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு - இன்று கடும் காற்று வீசும் என்பதால் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழில் நடவடிக்கைககள் முற்றாக சீர்குலைந்துள்ளதுடன் இன்றும் இந்த நிலை தொடரும் என்று மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன் இன்று புதன்கிழமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்றுடனான காலநிலை காணப்படும் எனவும் கடும் காற்று வீசும் எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெப். 13 08:35

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைக்கும் பணி நிறைவு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போரின் போது அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி அமைப்புப் பணி இறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவுத்தூபி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பெப். 12 23:33

பொறுப்புக்கூறல் தொடர்பாக ஜெனீவாவுக்கு விளக்கமளிக்கும் இலங்கை அரசாங்கம்- மீண்டும் வாக்குறுதி

(வவுனியா, ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டப் பிரதிநிதிகளை சந்தித்து விளக்கமளித்து வருகின்றது. ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள், உயர் அதிகாரிகளுடனும் சந்திப்பு இடம்பெறுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவா மனித உரிமைச் சபையின் சட்டப்பிரிவுத் தலைவர் மோனா ரிஷ்மவி (Mona Rishmawi) மற்றும் உயர் அதிகாரிகளை நீதியமைச்சர் தலதா அத்துகோரள சந்தித்து உரையாடியுள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பில், மனித உரிமைகளை பாதுகாக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் அடைந்து வருவதாக அமைச்சர் தலதா அத்துகோரள கூறியுள்ளார்.
பெப். 12 11:45

யாழ் நாயன்மார்க்கட்டில் உள்ள வீடொன்றில் முகமூடி நபர்கள் தாக்குதல்- பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டு நாயன்மார் வீதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டவேளை பொலிஸாருக்கு அறிவித்தபோதும் பொலிஸார் உடனயாக சம்பவ இடத்திற்குச் செல்லவில்லையென பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முகங்களை மூடிக் கட்டியவாறு வாள்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் தாக்குதலை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனம் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது.
பெப். 11 23:19

இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அமைப்பதை இந்தியா விரும்புகிறது- பேராசிரியர் பீரிஸ் கூறுகிறார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அமைப்பதையே இந்திய மத்திய அரசு விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இந்த ஆண்டு இலங்கை அரசியலில் பெரியதொரு மாற்றம் நிகழும் என இந்தியா எதிர்ப்பார்க்கின்றது. மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையும் என இந்தியா நம்புவதாகவும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆட்சியை கைப்பற்றுவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கமல்ல. மாறாக பத்து ஆண்டுகளுக்கு இலங்கையில் ஆட்சி செய்யக்கூடிய அடித்தளக் கொள்கை ஒன்றை வகுப்பதே பிரதான இலக்கு என்றும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.
பெப். 11 16:26

மன்னார் போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் குறித்த பரிசோதனை அறிக்கை விரைவில்

(மன்னார், ஈழம்) வடமாகாணம் மன்னார் நகர நுழை வாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதொச விற்பனைக் கட்டட வளாகத்தில் கண்டறியப்பட்ட போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் தொடாபான காபன் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியாகுமென எதிர்பார்ப்பதாக, அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனையை செய்து முடிப்பதற்காக இரண்டு வார அவகாசம் கோரப்பட்டிருந்தன.
பெப். 11 11:27

புதிய அரசியல் யாப்புகான வரைபில் மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிாரங்கள் இல்லை- அமைச்சர் லக்ஸ்மன்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்புக்கான வரைபில் மாகாணங்கள் இணைக்கப்படுதல், மாகாணங்களுக்கான காணி பொலிஸ் அதிகாரங்கள் எதுவும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியயெல்ல கன்டியில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போது கூறியுள்ளர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் பௌத்த குருமார் அதிகளவில் கலந்துகொண்டனர். அங்கு புதிய அரசியல் யாப்புக்கான வரைபு தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் திருத்தங்கள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பெப். 11 06:11

மட்டக்களப்பில் தொடர்மழை- நெல் வயல்கள் நீரில் ழுழ்கி அழிந்துள்ளதாக விவசாயிகள் கவலை

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தி்ல் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் அதிகளவு நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பெரும்போக அறுவடை ஆரம்பித்துள்ள முற்பகுதியிலே கனழமை பெய்ததனால் அறுவடை செய்த நெல் விற்க முடியாமலும், உணவுக்குப் பயன்படுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் அறக்கொட்டித்தாக்கத்திலிருந்து மிஞ்சிய வேளாண்மையை அறுவடை செய்யும் வேலையில் கனமழை பெய்து அழித்திவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.