பெப். 12 23:33
(வவுனியா, ஈழம் )
ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டப் பிரதிநிதிகளை சந்தித்து விளக்கமளித்து வருகின்றது. ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள், உயர் அதிகாரிகளுடனும் சந்திப்பு இடம்பெறுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவா மனித உரிமைச் சபையின் சட்டப்பிரிவுத் தலைவர் மோனா ரிஷ்மவி (Mona Rishmawi) மற்றும் உயர் அதிகாரிகளை நீதியமைச்சர் தலதா அத்துகோரள சந்தித்து உரையாடியுள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பில், மனித உரிமைகளை பாதுகாக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் அடைந்து வருவதாக அமைச்சர் தலதா அத்துகோரள கூறியுள்ளார்.