பெப். 15 09:41
(மன்னார், ஈழம்)
சர்வதேசத்தின் துணையுடன் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாது செய்யப்பட்டதன் பின்னரான நிலையில், தமிழ் மக்களது பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அடுத்த தலைமைப் பதவி யாருக்கு என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளதுடன், இதற்காக பலரும் போட்டியிடுவதாக கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மாறி மாறிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில்,
தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்திருந்தால் கூட்டமைப்பு இன்று இல்லாது போயிருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.