(சென்னை, தமிழ்நாடு)
வரவிருக்கின்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் வீரியம் பெற்றிருக்கும் நிலையில், தி.மு.கவின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜகத்ரட்சகன் அவர்களின் குடும்ப நிறுவனம் அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் பெரு முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. முன்னதாக, இலங்கை ஒற்றையாட்சி அரசின் முதலீட்டுக் குழுமம் (Board of investment) தெரிவித்த கருத்தினை முன்வைத்து தமிழகத்தின் இந்து ஆங்கிலப் பத்திரிகையில் மீரா சிறீனிவாசன் எழுதிய கட்டுரையினால் இக்கருத்து தமிழக வட்டத்தில் பேசும் பொருளாய் மாறியிருக்கின்றது. தேர்தல் காலத்தில் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டதா எனவும் தமிழக அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.