ஏப். 10 14:10
(மன்னார், ஈழம்)
இன மத ஒற்றுமைய வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற போராட்டத்தில் மன்னார் நகர், மடு, மாந்தை, முசலி, நானாட்டான் ஆகிய ஐந்து பிரதேசங்களைச் சேர்ந்த சர்வ மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தி சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்குகொண்டனர். மன்னார் மாவட்ட பொது நூலகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர். மதங்களைக் கடந்த மனிதத்தை நேசிப்போம் என்ற தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.