நிரல்
ஏப். 14 21:29

தமிழ்க் கட்சிகளுக்கு வாகளிப்பதில்லையென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்

(வவுனியா, ஈழம் ) வடமாகாணம் வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக 785 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சித்திரை வருடப்பிறப்பு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே என்று கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள், கணவன்மார் தொடர்பாக ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருவதாகவும் ஆனாலும் சிங்கள அரசியல்வாதிகள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் குற்றம் சுமத்தினர். சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தரவில்லை எனவும் அவர்கள் குறைகூறினர்.
ஏப். 13 22:54

கோட்டாபய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்குச் சட்டச் சிக்கலை ஏற்படுத்த மைத்திரி முயற்சி

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் தலைநகர் கொழும்பை மையப்படுத்திச் செயற்பட்டு வரும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளிடையே குழப்பங்கள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக மூத்த உறுப்பினர்களிடையே பணிப்போர் நீடிக்கின்றது. இந்த நிலையில் தென்னிலங்கையில் அடுத்த அரசியல் சக்தியாகவுள்ள ஜே.வி.பி இந்த மூன்று கட்சிகளின் செயற்பாடுகளையும் கண்டித்து விமர்சித்து வருகின்றது.
ஏப். 12 15:20

கொழும்புக்குத் திரும்பிய கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் தமிழர்கள் மீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் இருந்து கொழும்புக்குத் திரும்பியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய கோட்டாபய ராஜபக்சவை பெருமளவான ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வரவேற்றனர். இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி வாழ்க என்று கோஷம் எழுப்பிய ஆதரவாளர்கள், ஈழப் போரை அழித்த பெரும் தலைவரே எனவும் உரக்கச் சத்திமிட்டு வரவேற்றனர். கோட்டாபய ராஜபக்ச தனிப்பிட்ட முறையில கடந்த வாரம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.
ஏப். 11 22:45

கட்சிகளிடையே இணக்கப்பாடுகள் இல்லாத நிலையில் குழப்பங்கள் முரண்பாடுகள் அதிகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கான அரசியல் வேலைத் திட்டங்களில் இலங்கைப் பிதரமர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மூலமாகவே ரணில் விக்கிரமசிங்க அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையை ரத்துச் செய்தாலும் அவர் இலங்கைக் குடியுரிமையை மாத்திரமே கொண்டுள்ளார் என்பதை இலங்கை உள்நாட்டு அலுவலகள் அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும்.
ஏப். 11 15:58

யூலியான் அஸாஞ் பிரித்தானியாவால் கைது- அமெரிக்காவின் அழுத்தமெனக் குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழத்தமிழர் மீதான இன அழிப்புப் போரில் சர்வதேச சக்திகளின் பங்கு பற்றிய பல இரகசியங்களை வெளிக்கொணர்ந்த விக்கிலீக்ஸ் செய்தி இணையத்தளத்தின் நிறுவனர் யூலீயான் அஸாஞ் பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா வழங்கிய அழுத்தங்களினாலேயே அவர் பிரித்தானியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பூகோள அரசியல் நகர்வுகள், உள்நாட்டுப்போர்கள், நாடுகளிடையேயான மோதல்கள். உலக அளவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றிய விடயங்களில் அமெரிக்கத் தலையீடுகள், அமெரிக்க நிலைப்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் பல இரகசியத் தகவல்களை விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.
ஏப். 10 23:33

இலங்கை ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வை ஊடக அமைப்புகள் புறக்கணிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வை சுதந்திரந்திர ஊடக இயக்கம். உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உள்ளிட்ட ஐந்து ஊடக அமைப்புகள் புறக்கணித்துள்ளன. இன்று புதன்கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அழைப்பை ஊடக அமைப்புகள் நிராகரித்துள்ளன. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதற்குப் பின்னரான அரசியல் சூழலிலும் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக இதுவரை சரியான விசாரணைகள் நடத்தப்படவில்லை. இலங்கைப் பொலிஸ் ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உறுதியளித்திருந்தார்.
ஏப். 10 16:03

சத்குமாரவின் கைதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும்- பொல்காவல நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் தேரவாத பௌத்த சமயத்தை (Theravada Buddhist) மையப்படுத்திய பிக்குமார் சிலரின் ஒருபால் சேர்க்கை (Homosexuality) தொடர்பாக சிங்கள மொழியில் களு மக்கற (Black Dragon) என்ற சிறுகதையை எழுதிய சக்திக சத்குமார என்ற சிங்கள இளைஞன், குருநாகல் மாவட்ட பொல்காவல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 2007 ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் பிரிவு மூன்றின் கீழ் (International Covenant on Civil and Political Rights) (ICCPR) கைது செய்யப்பட்டே முப்பத்தி மூன்று வயதான சக்திக சத்குமார நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஏப். 10 14:10

மன்னாரில் மத ஒற்றுமையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்- பிரதேசத்தை துண்டாட வேண்டமென வலியறுத்தல்

(மன்னார், ஈழம்) இன மத ஒற்றுமைய வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற போராட்டத்தில் மன்னார் நகர், மடு, மாந்தை, முசலி, நானாட்டான் ஆகிய ஐந்து பிரதேசங்களைச் சேர்ந்த சர்வ மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தி சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்குகொண்டனர். மன்னார் மாவட்ட பொது நூலகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர். மதங்களைக் கடந்த மனிதத்தை நேசிப்போம் என்ற தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
ஏப். 09 18:30

கோட்டாபய போட்டியிடுவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்- மேதினக் கூட்டத்தில் உரையாற்றுவார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவருவதற்கு முன்னரே சர்வதேச மட்டத்திலான சதி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரைவில் கோட்டாபய ராஜபக்சவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராகப் பிரேரிப்பார் என்றும் அதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள சதி முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்படுமெனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ச உரையாற்றுவாரென்றும் அன்றில் இருந்து அவருடைய அரசியல் பயணம் ஆரம்பிக்குமெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது.
ஏப். 09 14:15

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு ஒக்ரோபா் மாதம் வெளியிடப்பட வேண்டுமென்கிறார் டளஸ்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் செயற்படும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த ஆண்டு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லையென ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த வேண்டுமானால் இந்த ஏப்பிரல் மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் தேர்தல் முறைகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால் திருத்தங்கள் எதுவும் இல்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. இதனால் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையென அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, அடுத்த ஆண்டு ஜனாவரி மாதம் எட்டாம் திகதியோடு மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் முடிவடைவதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் அறிவிக்கப்பட வேண்டும்.