ஏப். 11 15:58
(யாழ்ப்பாணம், ஈழம் )
ஈழத்தமிழர் மீதான இன அழிப்புப் போரில் சர்வதேச சக்திகளின் பங்கு பற்றிய பல இரகசியங்களை வெளிக்கொணர்ந்த விக்கிலீக்ஸ் செய்தி இணையத்தளத்தின் நிறுவனர் யூலீயான் அஸாஞ் பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா வழங்கிய அழுத்தங்களினாலேயே அவர் பிரித்தானியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பூகோள அரசியல் நகர்வுகள், உள்நாட்டுப்போர்கள், நாடுகளிடையேயான மோதல்கள். உலக அளவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றிய விடயங்களில் அமெரிக்கத் தலையீடுகள், அமெரிக்க நிலைப்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் பல இரகசியத் தகவல்களை விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.