(வவுனியா, ஈழம் )
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலையடுத்து குறிப்பிட்ட சில பிரதேசங்களில் தொடர்ச்சியாகப் பதற்றம் நிலவுகின்றது. இன்று திங்கட்கிழமை மாலை ஐந்து மணி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிலாபம், புத்தளம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகணத்தில் காலவரையறையற்ற ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குருநாகல் - குளியாப்பிட்டியா, பின்கிரியா, டும்மலசூரியா, ஹெட்டிபொல, ரஸ்நாயக்கபுர, கொபேகன போன்ற பிரதேசங்களில் மாத்திரமே இன்று பிற்பகல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் திடீரெனப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலாபம் நகரில் வன்முறைகள் ஆரம்பித்ததால் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.