(யாழ்ப்பாணம், ஈழம் )
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து அமெரிக்க - இலங்கை உயர்மட்டப் பிரதிநிதிகள் அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வொஷிங்டன் நகரில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோரும் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் சந்திப்பில் பங்குபற்றினர். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் நடத்திய முதலாவது சந்திப்பில், பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒத்துழைப்புக்கு அமைச்சர் திலக் மாரப்பன, இலங்கையின் சார்பில் விருப்பம் தெரிவித்துள்ளார்.