(முல்லைத்தீவு, ஈழம்)
இலங்கை அரசினால் நடத்தப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ள நினைவேந்தலில் அனைத்து மக்களையும் சமுகமளிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கிய ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வில் சமயத் தலைவர்கள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள், பிரமுகர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் பங்குகொள்ளவரென ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இலங்கைப் படையினரின் சோதனைக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.