கட்டுரை: விளக்கக்கட்டுரை: நிரல்
ஏப். 07 14:41

'கோட்டா வீட்டுக்குப் போ' என்பதல்ல, மகாவம்ச மன நிலையில் இருந்து சிங்கள மக்கள் விடுபட வேண்டும்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுகளினால் சிங்கள மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர் என்று கூறினாலும், மகாவம்ச மனநிலையில் இருந்து அவர்கள் முற்றுமுழுதாக விடுபட்டால் மாத்திரமே, உண்மையான மாற்றத்தைக் காண முடியும். போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள மக்கள் ஒவ்வொருவரும் கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனக் (GoHomeGota) கோசமிடுகின்றனர். ஆனால் கோட்டாபய வீட்டுக்குச் சென்றுவிட்டால் மாத்திரம் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது. ஏனெனில் 1947 ஆம் ஆண்டில் இருந்து இலங்கைத்தீவில் வகுக்கப்பட்ட அரசியல், பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் சிங்களத் தேசியவாதத்தைக் கருவாகக் கொண்டிருந்தமையே பிரதான காரணம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
மார்ச் 29 09:07

தமிழ்த் தரப்புகள் தமக்குள் இணைந்தே இந்தியாவையும் மேற்கையும் கையாளவேண்டும்

(யாழ்ப்பாணம், ஈழம்) பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்பதற்கு முன்னர் கடந்த வருடம் யூன் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை இலங்கை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காக உருவாக்கிய வலைப்பின்னல் தற்போது பட்டவர்த்தனமாகியுள்ளது. இச் சூழலில் தமிழர் தரப்புக்குள், இந்தியாவையும் மேற்கையும் நோக்கி இணைந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும். சுமந்திரன்-செல்வம் பிளவு மட்டுமல்ல, ஜெனீவாவை நோக்கி முன்வைக்கப்பட்ட இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணை பற்றிய கோரிக்கை இந்தியாவிடம் முன்வைக்கப்படவில்லை. அதைப் போல, ஒற்றையாட்சி நிராகரிப்பு இன்றி, 13 ஆம் திருத்தம் என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தவறு நடந்துள்ளது. இந்தத் தவறுகள் உடனடியாகத் திருத்தப்படவேண்டும்.
பெப். 12 13:28

வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைக்கப் பிரேரணை சமர்ப்பித்துப் பரீட்சிக்கலாமே!

(முல்லைத்தீவு) நாடாளுமன்ற நடைமுறை விதிமுறைகள் (Practical Terms) மற்றும் அங்கு நடைபெறவுள்ள அல்லது நடைபெற்ற விவாதங்களின் முக்கியமற்ற தன்மை அல்லது பிரதானப்படுத்தக்கூடிய விவாதங்கள் (Highlighted Debates) எது என்பதை நாடாளுமன்றச் செய்தியாளர்களே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் நாடாளுமன்ற விவாதங்களில் பேசும், அல்லது பிரேரணை, சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையைச் சமர்ப்பித்து விவாதங்களை நடத்தும் தமிழ்ப் பிரதிநிதிகள், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றம் (Sri Lankan Unitary state parliament) என்பதை ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை மற்றும் போரினால் உருவான பக்க விளைவுகளுக்குரிய அத்தனை தீர்வுகளையும் பேசிப் பெற்றுவிடாலமென்ற தோற்றப்பாட்டைக் காண்பிக்கின்றனர்.
ஜன. 31 21:53

கிட்டு பூங்கா எழுச்சியும் பொத்துவில்-தொடக்கம்-பொலிகண்டி எழுச்சியின் பின்தளச் சிக்கலும்

(யாழ்ப்பாணம், ஈழம்) இனப்பிரச்சனைக்கான தீர்வு நோக்கிய பாதையில் பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கோருவதற்கு எதிரான பேரணி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் பெரும் முயற்சியோடும் மக்கள் அணிதிரட்டலோடும் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தடம்புரண்டுபோயுள்ள அரசியல்வாதிகள் பலருக்கும் இந்தப் பெருந்திரள் வயிற்றுக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, இது கஜேந்திரகுமார் அணியின் தேர்தற் போட்டிக்கான அரசியல் என்பது அவரின் பேச்சில் வெளிப்பட்ட மறுப்புக்கும் அப்பாற்பட்ட உண்மை. ஆனால், அதற்கும் அப்பால் கிட்டு பூங்கா மக்கள் எழுச்சியின் தாற்ப்பரியம் ஆழமானது. அது சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டியது.
டிச. 22 20:23

மண் கவ்வியது ரெலோ, புளொட், ஈபிஆரெலெவ்வின் பதின்மூன்றாம் திருத்தக்கோரிக்கை

பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வதையே பிரதான கோரிக்கையாக முன்வைக்கவேண்டும் என்று யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் விடுதி விடுதியாய்க் களம் புகுந்த ரெலோ அணியோடு சேர்ந்து களமாடிய புளொட், ஈபிஆரெலெவ் நிலைப்பாடு சம்பந்தன், சுமந்திரன் தலைமையிலான அணியினரால் சாதுரியமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நகர்வு புதனன்று நடந்தேறியுள்ளது. தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் தான் அணிந்துகொண்ட சிறிய கச்சைத்துண்டையும் கழற்றியெறிந்த ரெலோவினை மேவி, முழுமையான கச்சையணிந்த சுமந்திரன் அணி களம் இறங்கியுள்ளது. விக்னேஸ்வரன் தனது நிலைப்பாடு இரண்டுக்கும் இடையானது என்று பெருமைப்படக்கூடிய அவலமும் நடந்தேறுகிறது. தமது தோல்வியால் திம்புக் கோட்பாட்டைச் சிதைத்த அவப்பெயரை ரெலோ அணியினர் சிறுமையோடு தழுவிக்கொள்கிறார்கள்.
டிச. 19 13:47

தமிழ்த் தேசியத்தை நீர்த்துப்போகச் செய்ய நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில் சுமந்திரன்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அணி என வர்ணிக்கப்படும் அணியின் பிதாமகர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம். தமிழ்த் தேசிய அடிப்படைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 'அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு' என்ற பாதையூடாகத் தமிழ்த் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்துவிடலாம் என்ற ஏமாற்று வித்தையாக அவர் உருவாக்கிய ஆபத்தான இணக்க அரசியலின் பிடிக்குள்ளேயே சுமந்திரன் அணி இன்று ஆழமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. 1985 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்த தமிழரசுக்கட்சியினர் திம்புக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால், அவர்களை விடவும் மீளமுடியாத தாழ்ந்த நிலைக்கு கூட்டமைப்பின் மற்றைய கட்சிகள் போயுள்ளன.
செப். 14 14:21

பச்சலெற் கோட்டபாயாவைக் குறிப்பெடுத்து பீரிஸை ஆமோதிக்கிறார்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அது பற்றிய விபரங்கள் எதனையும் குறிப்பெடுக்காமல் (note), பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நாவுடன் இணைந்து நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வோமெனக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய உறுதிமொழியைக் குறிப்பெடுப்பதாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்சலெற் கூறியுள்ளார்.
ஓகஸ்ட் 11 21:01

சுமந்திரன்-பீரிஸ் பேச்சுவார்த்தையில் அமெரிக்க-பசில் நகர்வு என்ற குட்டு மேலும் வெளிக்கிறது

(யாழ்ப்பாணம், ஈழம்) அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இலங்கை ஒற்றையாட்சி ராஜபக்ஷ அரசின் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரீசுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி ம. ஆ. சுமந்திரனின் சந்திப்பு கடந்த புதன்கிழமை (04 ஓகஸ்ட்) நடைபெற்றது என்ற விடயத்தை சுமந்திரனுடன் நெருங்கிய உறவைப் பேணும் மூத்த ஊடகவியலாளர் ந. வித்தியாதரன் வெளியிடும் காலைக்கதிர் நாளேட்டில் ''இனி இது இரகசியம் அல்ல'' என்று மின்னல் எனும் பெயரில் அவரே எழுதும் பத்தியில் புதன்கிழமையன்று (11 ஓகஸ்ட்) குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பக்கம் இந்த நகர்வு என்றால் பேரம்பேசல் எனும் நாணயத்தின் மறுபக்கம் என்ன என்ற புவிசார் அரசியற் கேள்விக்கான பதில்களும் ஊகங்களும் வலுத்துள்ளன.
ஓகஸ்ட் 08 16:42

அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் பீரிசுடன் சுமந்திரன் சந்திப்பு

புவிசார் அரசியலில் இலங்கையைத் தனது கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, அண்மையில் அமெரிக்காவுக்கு பசில் ராஜபக்ஷ பயணித்திருந்தபோது இரகசிய நகர்வொன்றை முன்னெடுத்திருந்தது. பசில் ராஜபக்ஷவுடனும் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான புலம்பெயர் தமிழ்க்குழு ஒன்றுடனும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. சுமந்திரனுடனும் இணக்கத்தை ஏற்படுத்தி ஓர் இரகசிய நகர்வை ஆரம்பித்த தகவலையும் அதன் புவிசார் அரசியற் பின்னணியையும் ஜூன் 20ம் திகதி கூர்மை ஆசிரியபீடம் வெளிப்படுத்தியிருந்தது. இந்த இரகசிய நகர்வின் அடுத்த கட்டம் தற்போது அமெரிக்காவின் கொழும்புத் தூதுவர் அலெய்னா தெப்லிஸின் முன்னிலையில் அமைச்சர் பீரிசுடன் சுமந்திரன் இரகசியமாகக் கலந்துரையாட வைக்கப்பட்டதன் மூலம் நகர்த்தப்பட்டிருக்கிறது.
ஓகஸ்ட் 01 13:21

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அணுகலாமா?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழகத்தில் வதியும் ஈழத்து உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை முன்னிறுத்தி புதிய ஒரு மெட்டில் ஓர் அரசியல் நகர்வு ஒன்று இன்று இணையவழிச் சந்திப்பில் உருவாகிறது. இதை வரவேற்கலாமா இல்லையா என்ற திண்டாட்டத்தில் ஈழத்துத் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளின் தலைவர்கள் சிலர் மூழ்கியிருக்கிறார்கள். இந்த ''இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மான மாநாட்டின்'' உள்ளடக்கம் என்ன வடிவம் எடுக்கக்கூடிய ஆபத்து உள்ளது என்பதை முற்கூட்டியே ஈழத்தமிழர் சமூகம் ஆராய வேண்டும். ''வட்டுக்கோட்டை நமஹ, இந்தோ-லங்கா ஒப்பந்த நமஹ, பதின்மூன்று நமஹ'' என்று பயணிக்கவும் ''சுயநிர்ணயம்'' பேசலாம் என்ற மூடுமந்திரமாக அது இருக்கும் வாய்ப்பு உள்ளதா என்பதே ஆய்வுக்குரிய கேள்வியாகிறது.