கட்டுரை: விளக்கக்கட்டுரை: நிரல்
செப். 30 14:37

சமூகநீதி வரலாற்றைச் சுமக்கும் தமிழ்நாடு கடந்துவந்த பாதை

(சென்னை, தமிழ்நாடு) இந்திய அளவில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குதல் தொடர்பாக ஆராய 1979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1983 இல் அறிக்கை வழங்கப்பட்டாலும், இந்திய ஒன்றியப் பிரதமர் வி.பி.சிங்க் தான் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை (50% இடஒதுக்கீடு) நிலைநாட்டினார். இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்கள் 35-50% இடஒதுக்கீட்டையே பின்பற்றி வருகிறபொழுதும் தமிழகத்தில் 69% இருந்து வருகிறது. இதற்கு எதிராக தொடர்ந்தும் நீதிமன்றங்களில் உயர்சாதி வகுப்பினர் வழக்குத் தொடுத்து வருகிறபொழுதும் வெல்லமுடியவில்லை. அடுத்தடுத்து வரவிருக்கிற ஆபத்துக்களை எதிர்கொள்ள முழு வரலாறை அனைவரும் அறிந்துக்கொள்ளும் நோக்கில் கூர்மை சமூகநீதி வரலாற்றைத் தொகுத்து வெளியிடுகிறது.
மே 25 11:51

இலங்கை தொடர்பான ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அழிப்பு

இலங்கை சார்ந்த ஏறக்குறைய 200 ஆவணங்களை, குறிப்பாக விடுதலைப்புலிகளின் எழுச்சிக்காலத்தில் பிரித்தானியாவின் உளவுத்துறையும் விசேட விமானத்துறையும் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு அறிவுரைகள் கொடுத்தது பற்றிய ஆவணங்களை, பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு அழித்துள்ளதென்பதை பில் மில்லர் எனும் மனித உரிமை ஆய்வாளர் பிரித்தானியாவின் பிரபல பத்திரிகையான கார்டியன் பத்திரிகையில் ஆதார பூர்வமாக அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், பிரித்தனியா அரசு இலங்கை அரசுடன் அக்காலத்தில் இணைந்து வேலை செய்தது பற்றிய ஆதாரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. பில் மில்லரின் கட்டுரையின் உள்ளடக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது.