கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மே 28 10:31

அமெரிக்காவுக்கு எழுந்துள்ள சந்தேகம் - மகிந்த அணியோடும் பேச்சு

(யாழ்ப்பாணம், ஈழம்) சீன-இலங்கை பாதுகாப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கான முன்நகர்த்தல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முழமையாக வெளிப்படுத்தப்படவில்லையென கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுடன் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்களின் பிரதிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழமை. குறிப்பாக ஜே.வி.பி அந்த விடயத்தில் கடும் பிடியாகவே இருக்கும். ஆனால் சீனாவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்து கொண்ட முன் நகர்த்தல் ஒப்பந்தம் குறித்து ஜே.வி.பியோ, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியோ இதுவரை கேள்வி எழுப்பவில்லை.
மே 23 10:32

வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்கவைத்தமைக்கான காரணம்?

(கிளிநொச்சி, ஈழம்) தமிழினஅழிப்பு போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த நிலங்களில் மீளக்குடியேற முடியாது நிலமீட்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இலங்கையில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டு அகதிகளை வடமாகாணத்தில் தங்கவைக்கும் திட்டத்திற்கு தொடர்ந்தும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளை வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கவைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நகரசபை மண்டபத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், குறித்த கலந்துரையாடலை அடுத்து குறித்த அகதிகள் வவுனியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மாவட்ட அதிபருக்கான மகஜர் மேலதிக அரச அதிபர் தி.திரேஷ்குமாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மே 11 15:50

இந்தோ-பசுபிக் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்காவில் கலந்துரையாடல்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச இராணுவப் புலனாய்வாளர்கள் தடையப் பொருட்கள் பலவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணை நடத்துகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமும் மற்றும் பலரிடமும் வாக்குமூலங்கள் பதியப்பட்டு தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்கள், பின்னணிகள் குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
மே 10 14:45

மாணவர்களின் விடுதலைக்கு மேற்குலகம் பொறுப்புக் கூற வேண்டும்

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தெளிவான விளக்கம் தரப்படவில்லையென இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர். இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டபோதும் அந்தச் சட்டத்தின் எந்தப் பிரிவின் அடிப்படையில் என்ன குற்றத்திற்காக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது தொடர்பாக இலங்கைப் பொலிஸார் எதுவுமே கூறவில்லையென சக மாணவர்களும் தெரிவிக்கின்றனர். அதேவேளை, இதனைச் சட்ட விடயமாகப் பார்க்காமல் ஈழத் தமிழர்களின் அரசியல பிரச்சினையாகவே நோக்க வேண்டுமென அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விளக்கம் நீதிமன்றத்திற்கு அவசியமே இல்லையென சட்டவல்லுநர்களும் கூறுகின்றனர்.
ஏப். 30 20:16

தேடப்படும் இஸ்லாமிய அரசின் சூட்சுமதாரி வீடியோவில் தோற்றம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஒசாமா பின் லாடனுக்குப் பின் அமெரிக்காவால் வேட்டையாடப்படும் முதலாம் நம்பர் இலக்கு இஸ்லாமிய அரசு என்ற குழுவின் தலைவனாகத் தன்னைத் தானே 2014 இல் பிரகடனப்படுத்திக்கொண்டவர் அபூ பக்கர் அல் பக்டாடி ஆவார். ஈராக்கைச் சேர்ந்த 48 வயது நிரம்பிய இவர் 2014 இல் ஒரு வீடியோவில் தோன்றினார். ஐந்து வருடங்களின் பின் முதன்முறையாக இந்தத் திங்கட்கிழமையன்று, குறிப்பாக இலங்கையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, அல் பக்டாடியின் காணொளி ஒன்று மீண்டும் வெளியாகியுள்ளமை உலகச் செய்திகளின் இன்றைய தலைப்பாகியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன் தன்னை இஸ்லாமிய அரசின் தலைவனாக வீடியோவில் வெளிப்படுத்திய அல் பக்டாடி, பொதுவாக பின் லாடனைப் போல பகிரங்கமாகத் தனது முகத்தை அடிக்கடி பிரபலப்படுத்துவதில்லை.