கட்டுரை: நிரல்
ஜூன் 20 15:31

கல்முனைப் போராட்டம்- பேரினவாதம் கையிலெடுத்த பின்னணி

(மட்டக்களப்பு, ஈழம்) கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் போராட்டங்களின் பின்னணியில் இந்துத்துவா அமைப்பு செயற்படுவதாக கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பௌத்த- இந்து உறவு என்ற பெயரில் வடக்கு- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சமீபகாலமாகச் செயற்பட்டு வரும் சில தமிழ்ப் பிரமுகர்கள், கண்டியக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட பௌத்த போதனைகளை முதன்மைச் சமயமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் கீழ் இந்து சமய அடையாளங்களைப் பின்பற்ற இணங்கிய சூழலில், பௌத்த குருமாருடன் இணைந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஜூன் 18 20:13

முஸ்லிம்களோடு தமிழர்களை மோதவிட பிக்குமார் திட்டம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களை மோதவிட்டு. மேலும் பிளவுகளை உருவாக்க பௌத்த பிக்குமார் முற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அம்பாறை- கல்முனை பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் பௌத்த பிக்குமாரினால் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றது. இதற்கு சில தமிழ்ப் பிரமுகர்களும் தங்களை அறியாமல் உடன்பட்டுள்ளனர். வேறு சில தமிழர்கள் நன்கு திட்டமிடப்பட்ட இலங்கைப் புலனாய்வுத் துறையின் தந்திரத்தை அறியாமல் துணைபோயுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஜூன் 18 11:12

இந்தியாவைக் கடந்து அமெரிக்காவோடு நெருக்கமாக முயற்சி

(வவுனியா, ஈழம்) தமிழ் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையை இலங்கை அரசாங்கம் கைவிடக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. 2016 ஆம் ஆண்டு இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், மாகாண சபைத் தேர்தல்களைக் குறைந்த பட்சம் இந்த ஆண்டு யூன் மாதத்திற்கு முன்னர் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 26 ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்ச்சியாக ஐம்பத்தொரு நாட்கள் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் தேர்தலை நடத்த முடியவில்லை.
ஜூன் 10 10:43

நரேந்திர மோடி மாலைதீவுக்குச் சென்று கொழும்பு வந்ததன் பின்னணி

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் நான்கு மணி நேரப் பயணமாகக் கொழும்புக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமியவாதிகளின் பயங்கரத் தாக்குதல்களை தடுப்பதற்கு இலங்கைக்கு இந்தியா உதவியளிக்கும் என்று பகிரங்கமாகவே உறுதியளித்துள்ளர். பூகோள அரசியலில் சிக்குண்டுள்ள இலங்கையில் இஸ்லாமிய இயக்கம் ஒன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளமை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கே அச்சுறுத்தல் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் நரேந்திர மோடியின் கொழும்புக்கான பயணம் அமைந்துள்ளது. இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மாலைதீவுக்குச் சென்ற நரேந்திர மோடி, மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராகிம் முகமதுவோடு பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கைளச் செய்துமுள்ளார்.
ஜூன் 01 22:26

ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறை அச்சுறுத்தல் ஆரம்பிக்கப்பட்டு இன்று 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழநாடு பத்திரிகை காரியாலயம் 1981 ஆம் ஆண்டு யூன் மாதம் 1ஆம் திகதி அதிகாலை எரிக்கப்பட்டமை ஊடகத்துறையின் இருண்ட யுகமாகும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை ஈழநாடு பத்திரிகை முதன்மைப்படுத்தி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. இலங்கையில் கொழும்பில் இருந்து பத்திரிகைகள் வெளிவந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை தமிழர்களின் அரசியல் உரிமை விடயத்தில் மிக முக்கிமான பங்கு வகித்திருந்தது.
ஜூன் 01 11:36

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய யாழ் பொது நூலகம் தீக்கிரையாகி 38 ஆண்டுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் மக்களின் கல்வி மற்றும் கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆசியாவின் மிகப்பெரிய பொது நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டமை சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. அறுதிப் பெரும்பான்மையுடன் 1977ஆம் ஆண்டு ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் 1981ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
மே 28 10:31

அமெரிக்காவுக்கு எழுந்துள்ள சந்தேகம் - மகிந்த அணியோடும் பேச்சு

(யாழ்ப்பாணம், ஈழம்) சீன-இலங்கை பாதுகாப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கான முன்நகர்த்தல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முழமையாக வெளிப்படுத்தப்படவில்லையென கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுடன் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்களின் பிரதிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழமை. குறிப்பாக ஜே.வி.பி அந்த விடயத்தில் கடும் பிடியாகவே இருக்கும். ஆனால் சீனாவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்து கொண்ட முன் நகர்த்தல் ஒப்பந்தம் குறித்து ஜே.வி.பியோ, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியோ இதுவரை கேள்வி எழுப்பவில்லை.
மே 23 10:32

வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்கவைத்தமைக்கான காரணம்?

(கிளிநொச்சி, ஈழம்) தமிழினஅழிப்பு போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த நிலங்களில் மீளக்குடியேற முடியாது நிலமீட்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இலங்கையில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டு அகதிகளை வடமாகாணத்தில் தங்கவைக்கும் திட்டத்திற்கு தொடர்ந்தும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளை வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கவைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நகரசபை மண்டபத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், குறித்த கலந்துரையாடலை அடுத்து குறித்த அகதிகள் வவுனியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மாவட்ட அதிபருக்கான மகஜர் மேலதிக அரச அதிபர் தி.திரேஷ்குமாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மே 11 15:50

இந்தோ-பசுபிக் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்காவில் கலந்துரையாடல்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச இராணுவப் புலனாய்வாளர்கள் தடையப் பொருட்கள் பலவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணை நடத்துகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமும் மற்றும் பலரிடமும் வாக்குமூலங்கள் பதியப்பட்டு தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்கள், பின்னணிகள் குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
மே 10 14:45

மாணவர்களின் விடுதலைக்கு மேற்குலகம் பொறுப்புக் கூற வேண்டும்

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தெளிவான விளக்கம் தரப்படவில்லையென இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர். இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டபோதும் அந்தச் சட்டத்தின் எந்தப் பிரிவின் அடிப்படையில் என்ன குற்றத்திற்காக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது தொடர்பாக இலங்கைப் பொலிஸார் எதுவுமே கூறவில்லையென சக மாணவர்களும் தெரிவிக்கின்றனர். அதேவேளை, இதனைச் சட்ட விடயமாகப் பார்க்காமல் ஈழத் தமிழர்களின் அரசியல பிரச்சினையாகவே நோக்க வேண்டுமென அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விளக்கம் நீதிமன்றத்திற்கு அவசியமே இல்லையென சட்டவல்லுநர்களும் கூறுகின்றனர்.