ஏப். 30 20:16
(யாழ்ப்பாணம், ஈழம் )
ஒசாமா பின் லாடனுக்குப் பின் அமெரிக்காவால் வேட்டையாடப்படும் முதலாம் நம்பர் இலக்கு இஸ்லாமிய அரசு என்ற குழுவின் தலைவனாகத் தன்னைத் தானே 2014 இல் பிரகடனப்படுத்திக்கொண்டவர் அபூ பக்கர் அல் பக்டாடி ஆவார். ஈராக்கைச் சேர்ந்த 48 வயது நிரம்பிய இவர் 2014 இல் ஒரு வீடியோவில் தோன்றினார். ஐந்து வருடங்களின் பின் முதன்முறையாக இந்தத் திங்கட்கிழமையன்று, குறிப்பாக இலங்கையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, அல் பக்டாடியின் காணொளி ஒன்று மீண்டும் வெளியாகியுள்ளமை உலகச் செய்திகளின் இன்றைய தலைப்பாகியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன் தன்னை இஸ்லாமிய அரசின் தலைவனாக வீடியோவில் வெளிப்படுத்திய அல் பக்டாடி, பொதுவாக பின் லாடனைப் போல பகிரங்கமாகத் தனது முகத்தை அடிக்கடி பிரபலப்படுத்துவதில்லை.