கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஓகஸ்ட் 11 22:17

வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச - அறிவிப்புக்கு முன்னர் மகிந்தவைச் சந்தித்த அமெரிக்கச் செயலாளர்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவாரென கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறுவதற்கு முன்னர் அமெரிக்காவின் மத்திய மற்றும் தென்னாசியாவிற்கான பதில் உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ், கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து இரண்டு மணிநேரம் உரையாடினர்.
ஓகஸ்ட் 09 14:28

இந்தியாவின் உள் விவகாரமா? மோடியைப் பாராட்டும் ரணில்

(வவுனியா, ஈழம்) ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் (Union) பிரிக்கப்பட்டு இந்திய மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதை இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களும் கண்டியை மையப்படுத்திய பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களும் வரவேற்றுள்ளனர். ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருந்தது. 1947 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவினால் பரிந்துரைக்கப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த நிலையில் நரேந்திரமோடி அரசு தன்னிச்சையாகப் பிரிந்துள்ளமை ஈழத் தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த மற்றுமொரு அடியாகவும் சிங்களத் தேசம் கருதுகின்றது.
ஓகஸ்ட் 01 11:05

மகாநாயக்கத் தேரர்களைத் திருப்திப்படுத்தும் வேட்பாளர் தெரிவுகள் - பின்னணியில் அமெரிக்கா!

(யாழ்ப்பாணம், ஈழம்) பௌத்த மகாநாயக்கத் தேரர்களையும் பௌத்த குருமாரையும் திருப்திப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளர்களையே பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் தெரிவு செய்ய முற்படுகின்றன. மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்திருந்த அமெரிக்கா, தற்போது பௌத்த குருமாரின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட விரும்பாத நிலையில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் பௌத்தகுருமாரின் விருப்பங்களுக்குரிய ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவு செய்வதில் ஆர்வம் காண்பிப்பதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி ஏற்கனவே சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை மாத்திரமே நம்பிச் செயற்படுன்றது.
ஜூலை 22 22:45

கன்னியா பற்றிய தொல்லியல் வர்த்தமானி சட்டவலு அற்றது - சுமந்திரன்

ஆதாரமற்ற அடிப்படைகளில் கன்னியா தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 18 ஆம் பிரிவுக்கு அமைவாக தனியார் காணியையும் சுவீகரிக்கலாம் என்ற வாதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே தொல்பொருள் திணைக்களமே தனியார் காணி என்பதை ஒத்துக்கொள்கின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வாதிட முயல்கிறார். தற்போது எழுந்துள்ள சர்ச்சையில் தலையிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ, நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கோ சட்ட ரீதியான எந்தவிதமான அதிகாரங்களும் இல்லையெனவும் அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் திங்களன்று தெரிவித்தார்.
ஜூலை 19 16:20

பேச்சுவார்த்தைக் காலத்து நமது ஈழநாடு ஆசிரியர் தலைப்புகளின் தொகுப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) விடுதலை வேண்டி நிற்கும் தேசிய இனங்களுக்கு ஊடகங்களின், குறிப்பாக பத்திரிகைகளின் பங்களிப்பு முக்கியமானது. செய்திப் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் உள்ளக மற்றும் உலக விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினாலும் தான் சார்ந்து நிற்கும் கமூகத்தின் உரிமைகளையும் தேசத்துக்கான அங்கீகாரத்தையும் கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும். ஆசிரிய பீடத்தின் கொள்கை அதுவாகவே இருக்கவும் வேண்டும். அந்த அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் வெளியாகிய நமது ஈழநாட்டின் ஆசிரியர் தலையங்கங்கள் முக்கியமாகிறது. 2002- 2003 ஆம் ஆண்டுகளில் ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பதவி வகித்திருந்த கலாநிதி எஸ். ரகுராம் எழுதிய ஆசிரியர் தலையங்கங்கள் தொகுக்கப்பட்டு உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம் என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.