கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மே 15 22:42

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது எப்படி?

(யாழ்ப்பாணம், ஈழம்) சந்திரிகாவின் ஆட்சியில் 1999. 2000 ஆம் ஆண்டுகளில் நான் வீரகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ரெலோ இயக்க முதல்வர் சிறிகாந்தா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன். ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் ஆனந்த சங்கரி ஆகியோரை நேர்காணல் செய்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் எழுதினேன். அதே காலப்பகுதியில் தினக்குரல் பத்திரிகையில் ரவிவர்மன் என்ற செய்தியாளர் இவர்களைத் தொடர்ச்சியாகப் பேட்டி கண்டு எழுதினார். விடுதலைப் புலிகளை விமர்சிப்பதைவிட சந்திரிகா ஆட்சியின் ஏமாற்றுக்களையே இவர்கள் தமது நேர்காணல்களில் கூடுதலாகக் குறிப்பிட்டிருந்தனர்.
மே 11 19:49

இலங்கை நீதித்துறையை விமர்சிக்க முடியுமா?

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீத்துறையை விமர்சிக்க ஊடக ஒழுக்க விதிகளில் இடமில்லை எனவும் இலங்கை அரசியலமைப்புக்கு அமைவாக ஊடகங்களில் நீதித்துறையை விமர்சித்தால் அது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் ஊடகவியலாளர்கள் பலர் கருதுகின்றனர். ஆனால் நீதித்துறையை விமர்சிக்க முடியும். எந்த அடிப்படையில் என்றால்...? ஈழத் தமிழர் அரசியல் வாழ்வுரிமைகளோடு கூடிய நியாப்பாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதும்போது, இலங்கை நீதித்துறையை விமர்சிக்கவும், குற்றம் சாட்டவும் முடியும். நீத்துறையின் நம்பகத் தன்மை குறித்த விடயங்களையும் கேள்விக்கு உட்படுத்த முடியும்.
ஏப். 10 22:55

கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியமும் கோவிட்- 19 நிதியமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமிப் பேரலை ஏற்பட்டபோது பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல சர்வதேசப் பொது நிறுவனங்களும் உதவியளித்திருந்தன. அதனையும் தாண்டி அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய சொந்த ஊரான அம்பாந்தோட்டைப் பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை என்ற பெயரில் நிதியம் ஒன்றை அமைத்திருந்தார். அப்போது ஜனாதிபதியாக சந்திரிகா பதவி வகித்திருந்தார்.
மார்ச் 18 22:19

இலங்கையுடன் சீன அபிவிருத்தி வங்கி ஒப்பந்தம்- 500 மில்லியன்கள் அமெரிக்க டொலர் நிதியுதவி

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட இலங்கை அரசாங்கம், சீன அபிவிருத்தி வங்கியுடன் (China Development Bank) (CDB) ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாகப் பெறக் கூடிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் இன்று புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பத்து ஆண்டுகள் கடன் திட்ட அடிப்படையிலேயே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு சீன அபிவிருத்தி வங்கி ஒரு பில்லியன் நிதியை கூட்டுக் கடன் (syndicated loan) திட்ட அடிப்படையில் வழங்கியிருந்தது. ஆனாலும் அ்ந்தக் கடனு்க்கான கால எல்லையும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேலும் எட்டு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளன.
மார்ச் 15 22:42

சீனப் பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையில்லை

(மன்னார், ஈழம் ) கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதைத் தடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகின்ற சீனப் பயணிகளுக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் எந்தவொரு பரிசோதனைகளும் இன்றி நேரடியாகக் கொழும்பு நகருக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளைச் சோதனையிட்டுப் பின்னர் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் 14 நாட்கள் தங்க வைக்கப்படுகின்றனர். சீனாவுக்கு அடுத்ததாகக் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான இத்தாலி நாட்டில் இருந்து வரும் பயணிகள், சிறப்பு முகாம்களில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
பெப். 18 22:45

மகிந்த- மைத்திரி கூட்டும்- 2015 ஆம் ஆண்டு மாற்றம் என்று கூறப்பட்ட அரசாங்கமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன கட்சி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்ச உள்ளிட்ட பத்து அரசியல் கட்சிகளுடன் ஒன்னைந்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா நிதஹாஸ் பொதுஜன சந்தானய என்று சிங்கள மொழியில் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணியின் தலைவராகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுச் செயலாளராக பசில் ராஜபக்ச ஆகியோர் செயற்படவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து இந்தப் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
ஜன. 15 23:19

இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை வெறுமனே இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகவும், இலங்கையின் ஜனநாயக உரிமைக்கான போராட்டமாகவும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் மாற்றியமைத்து வருகின்றன. கோட்டாபய ராஜபக்ச சென்ற 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அதாவது ராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இவ்வாறான செயற்பாடுகளில் இந்த நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று இரண்டு வாரங்களில் இந்தியா சென்றிருந்தபோது புதுடில்லியில் வைத்து ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பேச்சுக்களைப் பேச வேண்டிய அவசியமேயில்லை என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
ஜன. 02 00:11

ஜெனீவா மனித உரிமைச் சபையின் குற்றச்சாட்டில் இருந்து வெளியேற இலங்கை முன்னெடுக்கும் நகர்வுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சீனா, ரஷியாவுடன் இணைந்து ஈரான் இந்தியப் பெருங்கடலின் வடக்கு பகுதியில் கூட்டு இராணுவ பயிற்சி நடத்தியுள்ளது. இந்தத் தகவல் உலகம் முழுவதும் உள்ள இராணுவ ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா, ஈரான் நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகின்ற சூழலில், ஒலி வேகத்தின் 27 மடங்கு வேகத்தில் அணு ஆயுதங்களை அனுப்பும் திறன் கொண்ட அவாங்கார்ட் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை (Avangard hypersonic missile) ரஷியா போர் நடவடிக்கைக்காகப் பயன்படுத்தவுள்ளதாகவே கருதப்படுகின்றது.
டிச. 21 22:43

வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களை கொதி நிலையில் வைத்திருக்க விரும்பும் கொழும்பு நிர்வாகம்

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயக மக்களைப் பிரதான அரசியல் மையக்கருத்தில் இருந்து திசை திருப்பும் அரசியல் சதி முயற்சிகள் வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுவதாகச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். புத்தர் சிலைகள் வைத்தல். காணி அபகரிப்பு, சட்டவிரோத மண் அகழ்வு என நீடித்துத் தற்போது இலங்கைக்கு விஜயன் வந்த வரலாறுகளையும் சங்கமித்தையின் உருவச் சிலையையும் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் படைகளின் ஒத்துழைப்புடன் நிறுவி ஈழத் தமிழ் மக்களை ஆத்திரமடையச் செய்வதாகவும் கூறப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு்க்குப் பின்னரான சூழலில் ஆரம்பித்த இந்த உத்தி 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பை மையப்படுத்திய திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் ஊடாக விரிவாக்கம் செய்யப்பட்டன.
டிச. 07 21:10

சர்வதேச மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்குச் சுமந்திரனின் ஜெனீவா அணுகுமுறை வழி வகுக்குமா?

(யாழ்ப்பாணம், ஈழம்) கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனைச் சந்தித்து உரையாடியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது என்ற கருத்துக்கள் சகல மட்டங்களிலும் நிலவியிருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இந்த நிலையில் சம்பந்தனுடன் சென்ற வியாழக்கிழமை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வடக்குக்- கிழக்குத் தாயகத்தின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகச் சம்பந்தன் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.