கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
செப். 08 21:05

ஈழத்தமிழர் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட புலவர் புலமைப் பித்தன் இயற்கை எய்தினார்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்த தமிழ்நாட்டுப் புலவர் புலமைப்பித்தன் சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை இயற்கை எய்தினார். தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதிய புலமைப்பித்தன், ஈழவிடுதலைப் போராட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி ஈழத்தமிழ்ப் போராளிகளைக் காப்பாற்ற வேண்டுமென விரும்பியிருந்தாலும், தமிழ் ஈழம் அமைய வேண்டுமென்பதில் அவருக்கு உடன்பாடு இருந்திருக்கவில்லை என்பதைப் புலமைப் பித்தன் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
செப். 07 21:45

மங்கள சமரவீர பாணியில் பீரிஸ்: ஐ.நா. அணுகுமுறை புதிய வடிவில் முன்னெடுப்பு

(மன்னார், ஈழம்) பேராசிரியர் ஜீ. எல். பீரிஸை அமைச்சராகக் கொண்டியங்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிநாட்டமைச்சு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கடந்த 27ம் திகதி தான் சமர்ப்பித்த மனித உரிமை மற்றும் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பான புள்ளிவிபரங்கள் உள்ளடங்கிய அறிக்கையிடலின் பதின்மூன்று பக்கச் சுருக்கத்தை கொழும்பில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு 31ம் திகதி அனுப்பிவைத்திருக்கிறது. உள்நாட்டுப் பொறிமுறைகள் மிகவும் சீராக இயங்குவதான தோற்றப்பாட்டைக் கொடுக்கும் வகையில் 14 தலைப்புகளில் 25 புள்ளிகளில் கனகச்சிதமாக அவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் இதைப் பார்த்து வியந்து போயிருப்பதாகப் பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் தகவலறிந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 27 10:32

இந்தியா தொடர்பாக தப்புக்கணக்குகள் போடும் தமிழக, ஈழ, புலம்பெயர் தமிழர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) பாகிஸ்தான் தவிர்ந்த இலங்கை உள்ளிட்ட தெற்காசிய சார்க் (SAARC) நாடுகளின் பிம்ஸ்ரெக் (BIMSTEC) அமைப்பை மாத்திரம் இயக்குவதற்கு இந்தியா அண்மைய வருடங்களில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது தெரிந்ததே. அமெரிக்காவுடன் குவாட் (QUAD) எனும் இந்தோ பசுபிக் இராணுவ வியூகத்தில் இணைந்திருக்கும் இந்தியா, ஏப்ரல் இறுதியில் Supply Chain Resilience Initiative (SCRI) என்ற அமைப்பை QUAD உறுப்பு நாடுகளான ஜப்பானுடனும் அவுஸ்திரேலியாவுடனும் உருவாக்கியது. பதிலடியாக இந்தியாவைத் தவிர்த்து பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் அடங்கலாக தெற்கு நாடுகளின் வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு மையத்தை (China-South Asian Countries Poverty Alleviation and Cooperative Development Centre) சீனா ஜூலை மாதம் உருவாக்கியது.
ஜூலை 25 22:55

இடிந்துபோன மோடியின் தேசியவாதம்

(யாழ்ப்பாணம், ஈழம்) நரேந்திர மோடியின் மிகை- தேசியவாத உள்நாட்டு நிகழ்ச்சி நிரல் இந்தியாவை ஒரு 'விஸ்வகுரு' அல்லது 'உலகிற்கு மாஸ்டர்' ஆக்குவதற்கான அவரது இலட்சியம் உட்பட இந்துத்துவ தேசியச் சிந்தனைகள் எல்லாமே தற்போது சிக்கலில் உள்ளன. கோவிட் 19 நோய்ப் பரவலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் மந்த நிலை இந்தியாவை வெளிநாடுகளில் கையேந்த வைத்திருக்கிறது. எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 ற்கும் அதிகமான நாடுகளில் இருந்து இந்தியா உதவிகளைப் பெற்றிருப்பதாகவும் இது மோடியின் வெளியுறவுக் கொள்கைளில் பாரிய சரிவு என்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட பொறின்பொலிஸி (Foreign policy)என்ற கொள்கை இணையத்தளம் கூறுகின்றது.
ஜூன் 20 14:56

அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா?

ஒரு வாரத்துக்கு முன்பதாக, கடந்த ஞாயிறன்று பரம இரகசிய இணையக் கூட்டமொன்றை பிரித்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை எனும் அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் கூட்டினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டம் என்ன விடயம் பற்றியது தெரியுமா? அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் மறைமுக ஒழுங்கில் பசில் ராஜபக்ஷவுடன் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தி ஓர் உடன்பாட்டுக்கு வருவது தொடர்பானது. அதேவேளை இந்தியாவும் புலம்பெயர் சமூகத்துக்குள் 'மறுசீரமைப்பு' என்ற பெயரில் ஊடுருவுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
ஜூன் 12 21:15

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தையாகவும் மாறவுள்ள கொழும்பு போட் சிற்றி

(வவுனியா, ஈழம்) கொழும்பு போட் சிற்றியெனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தைச் சீனா வடிவமைப்பதால், எதிர்வரும் காலங்களில் இலங்கை சீனாவின் பக்கமே முற்று முழுதாகச் சாய்ந்துவிடுமென ஈழத்தமிழர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். நம்புகின்றனர். ஆனால் சிங்கள மக்கள் அவ்வாறான சிந்தனையில் இல்லையெனலாம். இலங்கையின் இறைமை சீனாவிடம் சிறிதளவேனும் பங்கிடப்படக் கூடாது. ஆனால் சீனாவிடம் உதவிகளைப் பெற வேண்டும் என்ற பகிரங்க நோக்கமே சிங்கள ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிங்கள மக்களிடமும் விஞ்சிக் காணப்படுகின்றன. இந்த உள்நோக்கமே இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போட் சிற்றிக்கான பொருளாதார ஆணைக்குழுச் சட்ட மூலத்திற்குச் சிங்கள எதிர்க்கட்சிகள் எதிர்ப்புடன் கூடிய மறைமுக ஆதரவை வழங்கியிருந்ததாகவும் கூறலாம்.
மே 18 20:40

தடைகளை உடைத்து நந்திக் கடலில் துணிவோடு வணக்கம் செலுத்திய சிவாஜிலிங்கம்- ஒளித்தோடிய தமிழ்த்தேசியக் கட்சிகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை அரசாங்கமும் அதன் முப்படையினரும் கொவிட் 19 நோய்ப்பரவலைக் காரணம்கூறிப் பல தடைகளை விதித்தபோதும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாத்திரமே துணிவோடு முல்லைத்தீவு நந்திக் கடலுக்குச் சென்று தீபம் ஏற்றி இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்த போராளிகளுக்கும் வணக்கம் செலுத்தினார். தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் உள்ள தமது அலுவலகத்தில் மாத்திரம் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர். ஆனால் நாடாளுமன்றத்தின் சபா மண்டபத்தில் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தவில்லை. அத்துடன் சபைக்குள்ளும் எதிர்ப்புகளை வெளியிடாமல் தமது ஆசனங்களில் அமைதியாகக் கறுப்பு உடைகளோடு அமர்ந்திருந்தனர்.
மே 11 20:28

மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணக்கம்

(மன்னார், ஈழம் ) வடக்கு கிழக்கு மாகாணத்தில் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை அங்குள்ள தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்ளுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தேசித்துள்ளது. இந்த நிலையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவிற்கு தமிழ்த் தேசிய கட்சிகள் யாவும் இணைந்து நிறுத்தவுள்ள உறுப்பினருக்கே முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தனது உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
மே 05 15:54

தமிழ் மண் பதிப்பகத்தின் நிறுவனர் இளவழகன் காலமானார்

(வவுனியா, ஈழம்) வல்லாதிக்க நாடுகளின் முழுமையான ஒத்துழைப்போடு இலங்கை அரசு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்தது. இந்த நாடுகள் தலையிடாமல் இருந்திருந்தால், இன்று சர்வதேச அரங்கில் தமிழ் இனத்துக்கு என்றொரு இடம் பொறிக்கப்பட்டிருக்கும் என்பதைத் தமிழ் நாட்டில் துணிவோடு வெளிப்படுத்தியவர்தான் தமிழ் மண் பதிப்பகத்தின் நிறுவனர் கோவிந்தசாமி இளவழகன். தமிழகத்தைச் சேர்ந்த உணர்வு மிக்க தலைவர்கள் என்று கூறப்படுவோர் தம் அரசியல் லாபத்திற்காக வடவரோடு இணங்கியும், பதுங்கியும், தன்னல உணர்வு மேலோங்கி இருந்தமையும் ஈழப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததென்றும் பகிரங்கமாகவே கூறியவர் இளவழகன்.
ஏப். 27 11:26

பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் அடுத்ததாகக் குறிவைக்கலாம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவை மட்டுமல்ல முழு உலகையே 2019 இல் உலுக்கிய உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த வெளிச்சக்திகள் எவை, எவ்வாறு அந்தத் தாக்குதல்கள் கனகச்சிதமாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டன, தாக்குதல்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது எவ்வாறு என்பது போன்ற நுட்பவியல், சித்தாந்த, மற்றும் புவிசார் அரசியற்காரணிகள் இதுவரை பொதுவெளியில் தெளிவாக வெளிப்படாத சூழலில், தாக்குதல்களை நடாத்தியவர்களுடைய குடும்பங்களுடன் குடும்ப, தொழில், மற்றும் சட்ட ஆலோசனை உறவுகளைப் பேணியோர் என எழுநூறுக்கும் மேற்பட்டவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறு ஈழத் தமிழர்களை பயங்கரவாதத் தடைச்சட்டம் பல தசாப்தங்களாகக் குறிவைத்ததோ அதேபோல் முஸ்லிம்கள் தற்போது குறிவைக்கப்பட்டுவருகிறார்கள்.