கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
டிச. 22 20:55

ஜெனீவா 30/1 தீர்மானத்திற்கு மீண்டும் சாயம் பூச முற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள்

(மட்டக்களப்பு, ஈழம் ) கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மாற்றுக்கொள்கை மையம் (Centre for Policy Alternatives-CPA) மற்றும் தேசிய சமாதானப் பேரவை (National Peace Council-NPC) போன்ற சில தன்னார்வ நிறுவனங்கள் சர்வதேச சக்திகளோடு சேர்ந்து 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சிங்கள அரசியல்வாதிகள் பலர் அவ்வாறு குற்றம் சுமத்தியுமிருந்தனர். இந்த அமைப்புகள் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் இலங்கை அரசாங்கம் அதற்கு இணை அணுசரனை வழங்குவதற்கும் (co-sponsorship) ஆதரவளித்தவை என்பதும் தெரிந்ததே.
நவ. 29 20:26

நினைவுத் திறத்தை நிலைநாட்ட ஈழத் தமிழர்களுக்கு வினைத்திறன் தேவை

(வவுனியா, ஈழம்) மாவீரர் நாளைப் பகிரங்கக் கூட்டு நினைவெழுச்சியாக இல்லாது மாற்றிவிடவேண்டும் என்று இலங்கை ஒற்றையாட்சி அரசு கங்கணம் கட்டி நிற்கிறது. நினைவேந்தலை நீர்த்துப்போகச்செய்யும் இந்தச் செயற்பாட்டில் உலக, பிராந்திய வல்லாதிக்கங்களும் இணைந்துள்ளன. பல தரப்புகளால் பல அடுக்குகளில் நகர்த்தப்படும் இந்த நகர்வுகளை ஈழத்தமிழர்கள் உணர்வுரீதியான முனைப்புகளூடாக மட்டும் முறியடித்துவிடமுடியாது. தர்க்கீக அடிப்படையில் நினைவுத்திறத்தை (memorialisation) முன்னெடுக்கவேண்டும். இதைச் செய்வதில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கிறது. இந்தப் பொறுப்பை மாவீரர் நினைவு நாளில் இவர்கள் சரிவரச்செய்திருக்கிறார்களா என்பதை உணர்வுத் தளத்துக்கு அப்பால் அறிவுரீதியாக ஆராயவேண்டியிருக்கிறது.
நவ. 24 00:58

ட்ரம்பின் பதவி முடிய முன்னர் இஸ்ரேலைப் பலப்படுத்தும் பொம்பியோ

(வவுனியா, ஈழம்) அமெரிக்கா தம் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கரமான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் கடந்த புதன்கிழமை கூறிய நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ ஆகியோர் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை இரகசியமாக ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்துள்ளன. சவுதி உயர்மட்டம் உத்தியோகபூர்வமாக இதை மறுத்துள்ளபோதும் இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். பதவி முடிவை எதிர்நோக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரின் இராஜாங்கச் செயலர் பொம்பியோவும் விட்டுச்செல்லும் வெளியுறவுத் தெரிவுகள் பாலஸ்தீனர்களையும் ஈழத்தமிழர்களையும் எவ்வாறு எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் பாதிக்கப்போகின்றன என்ற கேள்வி இத்தருணத்தில் எழுவது நியாயமானதே.
ஒக். 24 22:19

பேரம் பேசும் அரசியலைக் கூடச் செய்ய முடியாத கையறு நிலை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இருபது தமிழ் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். வடக்குக் கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்களே இந்த 28 உறுப்பினர்களும். கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் யோசைனக்கு இந்த 28 உறுப்பினர்களில் 19பேர் எதிராக வாக்களித்தனர்.
ஒக். 11 22:30

பௌத்தம் இலங்கைத் தீவுக்கு தமிழகம் ஊடாக வரவில்லையா?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழகத்தின் வைகை நதிக்கரை நாகரிகம் தொடர்பான கீழடி தொல்லியல் ஆய்வில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டபோது குறித்த வேலைத்திட்டத்தை நகர்த்துவதில் முக்கிய பங்காற்றிய தொல்லியலாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா புலம்பெயர் தமிழர் வலையமைப்பு ஒன்று ஒழுங்குபடுத்திய இணையவழிக் கூட்டம் ஒன்றில் சனிக்கிழமையன்று கலந்துகொண்டு விளக்கமளித்தார். தமிழகம், புலம்பெயர் சமூகம், ஈழம் ஆகிய மூன்று முனைகளில் இருந்து பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் உள்ளடங்கலான பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வைகை நதிக்கரையில் வழக்கில் இருந்த எழுத்துமொழிக்கும் ஈழத்தில் வெளிப்பட்டிருக்கும் தொல்லியல் சான்றுகளுக்கும் இடையிலான காலம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான ஒற்றுமைகளை அறிவதில் ஈடுபாடு காட்டினர்.
செப். 25 10:34

‘அச்சாப்பிள்ளை’ அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத் தியாகிகளாகவும் வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீதவான் நீதிமன்றம் மேலும் 14 நாட்களுக்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
செப். 05 08:06

அமெரிக்காவின் எண்ணெய் வயல் ஆய்வு- அம்பாறைக் கடலில் கப்பல் தீப்பற்றியது எப்படி?

(யாழ்ப்பாணம், ஈழம்) கிழக்கு மாகாணம் திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள், 2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பனாமா அரசுக்குச் சொந்தமான மெற் நியு டயமன்ட் (Mt New Diamond) என்ற கப்பல் எவ்வாறு தீப்பற்றி எரிந்தது என்ற கேள்விகள் எழுகின்றன. மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் பிக் பைனொர் (BGP Pioneer) என்ற ஆய்வுக் கப்பல் இந்த ஆய்வைச் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தியாவின் ஒடிசா துறைமுகத்துக்குச் சென்று கொண்டிருந்த மெற் நியு டைமன்ட் என்ற கப்பல் தீப்பற்றியிருக்கிறது.
ஓகஸ்ட் 27 14:43

மூன்றாவது யாப்பை உருவாக்கப்போகும் ராஜபக்ச ஆட்சி

(மட்டக்களப்பு, ஈழம் ) ஒரேநாடு ஒரு சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற முதல் அமர்வில் நிகழ்த்திய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையில் கூறியுள்ளமை ஆச்சரியப்படக் கூடியதல்ல. ஏனெனில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து இறைமையும் தன்னாதிக்கமும் உள்ள நாடாக மாறியபோதே இலங்கை ஒற்றையாட்சி அரசு (Unitary State) நிறுவப்பட்டுள்ளது. 1972ஆம் உருவாக்கப்பட்ட இலங்கை குடியரசு ஆகிய பின்னர் முதன் முதலாக உருவாக்கப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பு ஒரே நாடு ஒரு சட்டம் என்பதையே மறைமுகமாகவும் நேரடியாகவும் பிரகடனப்படுத்தியது.
ஓகஸ்ட் 13 22:46

ராஜபக்சக்களின் மீள் எழுச்சி சர்வதேசத்துக்கான செய்தி என்ன?

(யாழ்ப்பாணம், ஈழம்) மாற்றம் என்று கூறியும் நிலைமாறுகால நீதிகிடைக்குமெனவும் மார்தட்டிக் கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதரவோடு 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம், நினைத்ததைச் சாதிக்கவில்லை. புதவிக்கு வந்த மூன்றாம் மாதம் ஆரம்பித்த மைத்திரி- ரணில் முரண்பாடு, ராஜபக்ச குடும்பத்திற்கும் அந்தக் குடும்பத்தை நம்பி அரசியலில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களுக்கும் வரப்பிரசாதமாகவே அமைந்தது. அதன் பெறுபேற்றை, 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இருநூறுக்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்றி ராஜபக்ச அணி வெளிப்படுத்தியது. தமது அதிகாரத்தை மீண்டும் நிரூபித்தது.
ஜூன் 26 12:57

வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயத்திணிப்பும் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகத்தின் கவனயீனமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழான இலங்கைத் தேசியம் என்பதற்குள், ஈழத்தமிழர்களையும் இணைத்துவிட வேண்டுமென்ற நோக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் கட்சிகளிடையே மேலோங்கி வருகின்றது. இதன் உச்சத்தை 2015ஆம் ஆண்டு மைத்தரி- ரணில் அரசாங்கத்தில் காணமுடிந்தது. இலங்கைத் தேசியத்தை மையமாகக் கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்துக்கான முதற்கட்ட ஏற்பாடாகவே ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியிருந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஒத்துழைப்பும் கொடுத்திருந்தது.