கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஏப். 27 11:26

பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் அடுத்ததாகக் குறிவைக்கலாம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவை மட்டுமல்ல முழு உலகையே 2019 இல் உலுக்கிய உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த வெளிச்சக்திகள் எவை, எவ்வாறு அந்தத் தாக்குதல்கள் கனகச்சிதமாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டன, தாக்குதல்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது எவ்வாறு என்பது போன்ற நுட்பவியல், சித்தாந்த, மற்றும் புவிசார் அரசியற்காரணிகள் இதுவரை பொதுவெளியில் தெளிவாக வெளிப்படாத சூழலில், தாக்குதல்களை நடாத்தியவர்களுடைய குடும்பங்களுடன் குடும்ப, தொழில், மற்றும் சட்ட ஆலோசனை உறவுகளைப் பேணியோர் என எழுநூறுக்கும் மேற்பட்டவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறு ஈழத் தமிழர்களை பயங்கரவாதத் தடைச்சட்டம் பல தசாப்தங்களாகக் குறிவைத்ததோ அதேபோல் முஸ்லிம்கள் தற்போது குறிவைக்கப்பட்டுவருகிறார்கள்.
ஏப். 16 15:23

இந்திய அரசு வழங்கிய உழவு இயந்திரங்களுக்கு நடந்தது என்ன?

(மன்னார், ஈழம் ) இலங்கை தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த இறுதிப் போரில் கடும் பாதிப்படைந்த வட மாகாண தமிழ் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட உழவு இயந்திரங்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல கமநல சேவை நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த உழவு இயந்திரங்களில் பலவற்றை, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் நிர்வகிக்கப்பட்ட மன்னார் மாவட்ட முசலி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டன. எனினும் அந்த உழவு இயந்திரங்கள் கடந்த வருடம் முசலி பிரதேச சபையினால் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஏப். 11 15:59

இடம் மாறப்போகும் இனவாதம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஆட்சி மாற்றம் ஒன்றே இலங்கையில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்குமென்ற பொய்மைக்குள் 1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் உட்படப் பலரும் விழுந்தனர். 17 ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி கவிழ்ந்ததால், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பிரச்சனைகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளும் தீர்ந்து வடக்குக் கிழக்கு அடங்கலாக இலங்கைத் தீவு சுபீட்சமடையுமென்ற பிரச்சாரமும் அன்று செய்யப்பட்டிருந்தது. ஆனால் சந்திரிகா பதவியேற்றுச் சில மாதங்களிலேயே மீண்டும் போர் மூண்டது.
மார்ச் 18 23:46

இன அழிப்புக்கு நீதிகோரும் குரல்கள் பிரித்தானிய நாடாளுமன்றில் ஓங்கி ஒலித்தன

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் கிழமை வாக்கெடுப்புக்கு வரப்போகும் இலங்கை நிலைமை தொடர்பான தீர்மான வரைபில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான இறுதித் தவணையும் முடிந்து இரண்டு நாட்களின் பின்னரே பிரித்தானியப் பாராளுமன்றில் வியாழனன்று விவாதம் வந்தது. இதனால் உடனடிப் பலன் இல்லாவிடினும் ஈழத்தமிழர்கள் தொடரவேண்டிய இன அழிப்பு நீதிக்கான போராட்டத்தின் திசை எது என்பது நிரூபணமாகியுள்ளது. இது உலகளாவிய ஈழத்தமிழருக்கு நம்பிக்கை தரும் ஒரு படிப்பினை. சர்வதேச சக்திகளுடன் இணக்க அரசியல் புரிவதை விடவும் இன அழிப்பு நீதிக்கான அறம் சார்ந்த போராட்ட அரசியலையே ஈழத்தமிழர்கள் முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதே பொருத்தமான அணுகுமுறை என்பது ஐயந்திரிபற வெளிப்பட்டிருக்கிறது.
மார்ச் 14 11:33

தமிழர் தாயகத்தின் காணி ஆவணங்கள் அனுராதபுரம் செயலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னணி

இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை ஈழத்தமிழ் அமைப்புகளினால் கோரப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா. பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அதனைப் பொருட்படுத்தாமல், இரு தரப்புக்குமான போர்க்குற்ற பொறுப்புக்கூறலை மாத்திரமே வலியுறுத்தி வருகின்றன இதனால் சிங்கள ஆட்சியாளர்கள் எந்தவிதமான பயமும் இன்றி மிகத் துணிவோடு தமிழர் தாயகத்தின் காணி ஆவணங்களை அதிகாரபூர்வமாக சிங்களப் பிரதேசங்களில் உள்ள மாவட்டச் செயலகங்களுக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் இது ஏலவே நடந்து முடிந்துவிட்டதொரு நிலையில் தற்போது வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பை மையப்படுத்திய காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலேயே இந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
பெப். 25 15:39

இலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழர் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை இந்திய மத்திய அரசு கையில் எடுக்குமானால், சிங்கள ஆட்சியாளர்கள் அடங்கிப்போவதைத் தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இருக்காது. ஆனால் இந்தியா எப்போதுமே இலங்கையின் பக்கம் சார்ந்து செயற்படுவதால். இந்தியா ஒரு வல்லாதிக்க நாடு என்பதையும் கடந்து சிங்கள ஆட்சியாளர்கள் தன்னிச்சையாகவே செயற்படுகின்றனர். அவ்வப்போது இராஜதந்திர ரீதியாக அவமானப்படுத்தியுமிருக்கின்றனர். உதாரணங்கள் பல இருந்தும் கொழும்பில் இந்திய அப்பலோ மருத்துவமனை 2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இலங்கை தனதாக்கிக் கொண்டதைப் பிரதானமாகக் கூறலாம். இந்தியாவோடு செய்யப்பட்ட பல சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் ரத்துச் செய்யப்பட்டமை பற்றிய உதாரணங்களும் உண்டு.
பெப். 15 11:03

ஐ.நாவின் தோல்விக்கு இணைத் தலைமை நாடுகளே காரணம்

(யாழ்ப்பாணம், ஈழம்) நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றபோது இணைத்தலைமை நாடுகள் ஜப்பான் தலைநகர் ரோக்கியோவில் நடத்திய மாநாடுதான், விடுதலைப் புலிகள் பேச்சில் இருந்து வெளியேற்றப்படுவதற்குப் பிரதான காரணமாக இருந்தது. அந்த மாநாடுதான் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கும் வாய்ப்பாக இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கே சாதகமாகவும் இருந்தது என்பது வெளிப்படை. இவ்வாறானதொரு நிலையில், ஐக்கிய நாடுகள் முன்னாள் உதவிச் செயலாளர் சாரலஸ் பெட்ரி, இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையை நம்ப வேண்டாமெனக் கூறுகின்றார்.
பெப். 12 15:15

சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறுகிறார் பேராயர் மல்க்கம் ரஞ்சித்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை கத்தோலிக்கத் திருச்சபையின் வடக்குக் கிழக்கு ஆயர்கள், அருட்தந்தையா்கள் ஆதரித்தும் பங்குபற்றியும் வந்திருக்கின்றனர். இதனால் அருட்தந்தையர்கள் பலர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் கைது செய்யப்பட்டுமிருந்தனர். ஆனால் அப்போதெல்லாம் பேராயர்கள் இலங்கை அரசாங்கத்தை கண்டித்திருந்தாலும் உரிய முறையில் அழுத்தம் கொடுத்திருக்கவில்லை. 1985 ஆம் ஆண்டு மன்னாரில் அருட்தந்தை மேரி பஸ்த்தியன் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தாா். 1999 ஆம் ஆண்டு மடு தேவாலயம் மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு நூற்றுக்கும் அதிகமானேர் உடல் சிதறிப் பலியாகியிருந்தனர்.
ஜன. 16 11:17

இன அழிப்பை உள்ளடக்கி சர்வதேசப் பொறுப்புக்கூறலை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கோருகின்றன

(யாழ்ப்பாணம், ஈழம்) நீண்ட இழுபறிக்கும் பலத்த அழுத்தங்களுக்கும் மத்தியில் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் மூன்று தேர்தற் கட்சி அணிகளும் ஒருங்கிணைந்து இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக் குற்றம், போர்க்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்களை ஐ.நா.வின் உச்சபட்சப் பொறுப்புக்கூறல் மற்றும் விசாரணைப் பொறிமுறைகளுக்குள் விரைந்து செலுத்துமாறு ஒரு கூட்டு வேண்டுகோளை சனிக்கிழமையன்று விடுத்துள்ளன. இன அழிப்புக்கான சர்வதேச நீதியை வேண்டிநிற்கும் கோரிக்கையில் சம்பந்தனும் கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் இணைந்து கையொப்பமிட்டுள்ளமை ஒரு முக்கிய மைல்கல்லாக நோக்கப்படும் அளவுக்கு இந்தக் கூட்டு முயற்சிக்குப் பின்னால் ஆழமான தமிழ்த்தேசியச் சக்திகள் பல முனைகளில் இருந்தும் தீவிரமாகக் களமிறங்கிச் செயற்பட்டுள்ளன.
ஜன. 08 23:47

இந்தியாவும் 13 ஆவது திருத்தச் சட்டமும்

(வவுனியா, ஈழம்) இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்பு (Maritime Domain Awareness--MDA) நடவடிக்கைகளை சில நாட்களுக்குள் இலங்கை ஆரம்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கின்றார். இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சனைக்குத் தீர்வாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட 13ஆவது திருத்தச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதே சிறந்தது என்றும் ஜெய்சங்கர் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் கூறியிருக்கிறார்.