கட்டுரை: நிரல்
செப். 15 22:56

அமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி

(மன்னார், ஈழம்) வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செப். 14 14:21

பச்சலெற் கோட்டபாயாவைக் குறிப்பெடுத்து பீரிஸை ஆமோதிக்கிறார்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அது பற்றிய விபரங்கள் எதனையும் குறிப்பெடுக்காமல் (note), பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நாவுடன் இணைந்து நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வோமெனக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய உறுதிமொழியைக் குறிப்பெடுப்பதாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்சலெற் கூறியுள்ளார்.
செப். 08 21:05

ஈழத்தமிழர் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட புலவர் புலமைப் பித்தன் இயற்கை எய்தினார்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்த தமிழ்நாட்டுப் புலவர் புலமைப்பித்தன் சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை இயற்கை எய்தினார். தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதிய புலமைப்பித்தன், ஈழவிடுதலைப் போராட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி ஈழத்தமிழ்ப் போராளிகளைக் காப்பாற்ற வேண்டுமென விரும்பியிருந்தாலும், தமிழ் ஈழம் அமைய வேண்டுமென்பதில் அவருக்கு உடன்பாடு இருந்திருக்கவில்லை என்பதைப் புலமைப் பித்தன் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
செப். 07 21:45

மங்கள சமரவீர பாணியில் பீரிஸ்: ஐ.நா. அணுகுமுறை புதிய வடிவில் முன்னெடுப்பு

(மன்னார், ஈழம்) பேராசிரியர் ஜீ. எல். பீரிஸை அமைச்சராகக் கொண்டியங்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிநாட்டமைச்சு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கடந்த 27ம் திகதி தான் சமர்ப்பித்த மனித உரிமை மற்றும் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பான புள்ளிவிபரங்கள் உள்ளடங்கிய அறிக்கையிடலின் பதின்மூன்று பக்கச் சுருக்கத்தை கொழும்பில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு 31ம் திகதி அனுப்பிவைத்திருக்கிறது. உள்நாட்டுப் பொறிமுறைகள் மிகவும் சீராக இயங்குவதான தோற்றப்பாட்டைக் கொடுக்கும் வகையில் 14 தலைப்புகளில் 25 புள்ளிகளில் கனகச்சிதமாக அவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் இதைப் பார்த்து வியந்து போயிருப்பதாகப் பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் தகவலறிந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 11 21:01

சுமந்திரன்-பீரிஸ் பேச்சுவார்த்தையில் அமெரிக்க-பசில் நகர்வு என்ற குட்டு மேலும் வெளிக்கிறது

(யாழ்ப்பாணம், ஈழம்) அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இலங்கை ஒற்றையாட்சி ராஜபக்ஷ அரசின் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரீசுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி ம. ஆ. சுமந்திரனின் சந்திப்பு கடந்த புதன்கிழமை (04 ஓகஸ்ட்) நடைபெற்றது என்ற விடயத்தை சுமந்திரனுடன் நெருங்கிய உறவைப் பேணும் மூத்த ஊடகவியலாளர் ந. வித்தியாதரன் வெளியிடும் காலைக்கதிர் நாளேட்டில் ''இனி இது இரகசியம் அல்ல'' என்று மின்னல் எனும் பெயரில் அவரே எழுதும் பத்தியில் புதன்கிழமையன்று (11 ஓகஸ்ட்) குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பக்கம் இந்த நகர்வு என்றால் பேரம்பேசல் எனும் நாணயத்தின் மறுபக்கம் என்ன என்ற புவிசார் அரசியற் கேள்விக்கான பதில்களும் ஊகங்களும் வலுத்துள்ளன.
ஓகஸ்ட் 08 16:42

அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் பீரிசுடன் சுமந்திரன் சந்திப்பு

புவிசார் அரசியலில் இலங்கையைத் தனது கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, அண்மையில் அமெரிக்காவுக்கு பசில் ராஜபக்ஷ பயணித்திருந்தபோது இரகசிய நகர்வொன்றை முன்னெடுத்திருந்தது. பசில் ராஜபக்ஷவுடனும் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான புலம்பெயர் தமிழ்க்குழு ஒன்றுடனும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. சுமந்திரனுடனும் இணக்கத்தை ஏற்படுத்தி ஓர் இரகசிய நகர்வை ஆரம்பித்த தகவலையும் அதன் புவிசார் அரசியற் பின்னணியையும் ஜூன் 20ம் திகதி கூர்மை ஆசிரியபீடம் வெளிப்படுத்தியிருந்தது. இந்த இரகசிய நகர்வின் அடுத்த கட்டம் தற்போது அமெரிக்காவின் கொழும்புத் தூதுவர் அலெய்னா தெப்லிஸின் முன்னிலையில் அமைச்சர் பீரிசுடன் சுமந்திரன் இரகசியமாகக் கலந்துரையாட வைக்கப்பட்டதன் மூலம் நகர்த்தப்பட்டிருக்கிறது.
ஓகஸ்ட் 01 13:21

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அணுகலாமா?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழகத்தில் வதியும் ஈழத்து உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை முன்னிறுத்தி புதிய ஒரு மெட்டில் ஓர் அரசியல் நகர்வு ஒன்று இன்று இணையவழிச் சந்திப்பில் உருவாகிறது. இதை வரவேற்கலாமா இல்லையா என்ற திண்டாட்டத்தில் ஈழத்துத் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளின் தலைவர்கள் சிலர் மூழ்கியிருக்கிறார்கள். இந்த ''இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மான மாநாட்டின்'' உள்ளடக்கம் என்ன வடிவம் எடுக்கக்கூடிய ஆபத்து உள்ளது என்பதை முற்கூட்டியே ஈழத்தமிழர் சமூகம் ஆராய வேண்டும். ''வட்டுக்கோட்டை நமஹ, இந்தோ-லங்கா ஒப்பந்த நமஹ, பதின்மூன்று நமஹ'' என்று பயணிக்கவும் ''சுயநிர்ணயம்'' பேசலாம் என்ற மூடுமந்திரமாக அது இருக்கும் வாய்ப்பு உள்ளதா என்பதே ஆய்வுக்குரிய கேள்வியாகிறது.
ஜூலை 27 10:32

இந்தியா தொடர்பாக தப்புக்கணக்குகள் போடும் தமிழக, ஈழ, புலம்பெயர் தமிழர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) பாகிஸ்தான் தவிர்ந்த இலங்கை உள்ளிட்ட தெற்காசிய சார்க் (SAARC) நாடுகளின் பிம்ஸ்ரெக் (BIMSTEC) அமைப்பை மாத்திரம் இயக்குவதற்கு இந்தியா அண்மைய வருடங்களில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது தெரிந்ததே. அமெரிக்காவுடன் குவாட் (QUAD) எனும் இந்தோ பசுபிக் இராணுவ வியூகத்தில் இணைந்திருக்கும் இந்தியா, ஏப்ரல் இறுதியில் Supply Chain Resilience Initiative (SCRI) என்ற அமைப்பை QUAD உறுப்பு நாடுகளான ஜப்பானுடனும் அவுஸ்திரேலியாவுடனும் உருவாக்கியது. பதிலடியாக இந்தியாவைத் தவிர்த்து பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் அடங்கலாக தெற்கு நாடுகளின் வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு மையத்தை (China-South Asian Countries Poverty Alleviation and Cooperative Development Centre) சீனா ஜூலை மாதம் உருவாக்கியது.
ஜூலை 25 22:55

இடிந்துபோன மோடியின் தேசியவாதம்

(யாழ்ப்பாணம், ஈழம்) நரேந்திர மோடியின் மிகை- தேசியவாத உள்நாட்டு நிகழ்ச்சி நிரல் இந்தியாவை ஒரு 'விஸ்வகுரு' அல்லது 'உலகிற்கு மாஸ்டர்' ஆக்குவதற்கான அவரது இலட்சியம் உட்பட இந்துத்துவ தேசியச் சிந்தனைகள் எல்லாமே தற்போது சிக்கலில் உள்ளன. கோவிட் 19 நோய்ப் பரவலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் மந்த நிலை இந்தியாவை வெளிநாடுகளில் கையேந்த வைத்திருக்கிறது. எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 ற்கும் அதிகமான நாடுகளில் இருந்து இந்தியா உதவிகளைப் பெற்றிருப்பதாகவும் இது மோடியின் வெளியுறவுக் கொள்கைளில் பாரிய சரிவு என்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட பொறின்பொலிஸி (Foreign policy)என்ற கொள்கை இணையத்தளம் கூறுகின்றது.
ஜூன் 20 14:56

அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா?

ஒரு வாரத்துக்கு முன்பதாக, கடந்த ஞாயிறன்று பரம இரகசிய இணையக் கூட்டமொன்றை பிரித்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை எனும் அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் கூட்டினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டம் என்ன விடயம் பற்றியது தெரியுமா? அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் மறைமுக ஒழுங்கில் பசில் ராஜபக்ஷவுடன் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தி ஓர் உடன்பாட்டுக்கு வருவது தொடர்பானது. அதேவேளை இந்தியாவும் புலம்பெயர் சமூகத்துக்குள் 'மறுசீரமைப்பு' என்ற பெயரில் ஊடுருவுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.