கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜூன் 12 21:15

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தையாகவும் மாறவுள்ள கொழும்பு போட் சிற்றி

(வவுனியா, ஈழம்) கொழும்பு போட் சிற்றியெனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தைச் சீனா வடிவமைப்பதால், எதிர்வரும் காலங்களில் இலங்கை சீனாவின் பக்கமே முற்று முழுதாகச் சாய்ந்துவிடுமென ஈழத்தமிழர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். நம்புகின்றனர். ஆனால் சிங்கள மக்கள் அவ்வாறான சிந்தனையில் இல்லையெனலாம். இலங்கையின் இறைமை சீனாவிடம் சிறிதளவேனும் பங்கிடப்படக் கூடாது. ஆனால் சீனாவிடம் உதவிகளைப் பெற வேண்டும் என்ற பகிரங்க நோக்கமே சிங்கள ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிங்கள மக்களிடமும் விஞ்சிக் காணப்படுகின்றன. இந்த உள்நோக்கமே இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போட் சிற்றிக்கான பொருளாதார ஆணைக்குழுச் சட்ட மூலத்திற்குச் சிங்கள எதிர்க்கட்சிகள் எதிர்ப்புடன் கூடிய மறைமுக ஆதரவை வழங்கியிருந்ததாகவும் கூறலாம்.
மே 18 20:40

தடைகளை உடைத்து நந்திக் கடலில் துணிவோடு வணக்கம் செலுத்திய சிவாஜிலிங்கம்- ஒளித்தோடிய தமிழ்த்தேசியக் கட்சிகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை அரசாங்கமும் அதன் முப்படையினரும் கொவிட் 19 நோய்ப்பரவலைக் காரணம்கூறிப் பல தடைகளை விதித்தபோதும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாத்திரமே துணிவோடு முல்லைத்தீவு நந்திக் கடலுக்குச் சென்று தீபம் ஏற்றி இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்த போராளிகளுக்கும் வணக்கம் செலுத்தினார். தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் உள்ள தமது அலுவலகத்தில் மாத்திரம் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர். ஆனால் நாடாளுமன்றத்தின் சபா மண்டபத்தில் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தவில்லை. அத்துடன் சபைக்குள்ளும் எதிர்ப்புகளை வெளியிடாமல் தமது ஆசனங்களில் அமைதியாகக் கறுப்பு உடைகளோடு அமர்ந்திருந்தனர்.
மே 11 20:28

மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணக்கம்

(மன்னார், ஈழம் ) வடக்கு கிழக்கு மாகாணத்தில் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை அங்குள்ள தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்ளுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தேசித்துள்ளது. இந்த நிலையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவிற்கு தமிழ்த் தேசிய கட்சிகள் யாவும் இணைந்து நிறுத்தவுள்ள உறுப்பினருக்கே முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தனது உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
மே 05 15:54

தமிழ் மண் பதிப்பகத்தின் நிறுவனர் இளவழகன் காலமானார்

(வவுனியா, ஈழம்) வல்லாதிக்க நாடுகளின் முழுமையான ஒத்துழைப்போடு இலங்கை அரசு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்தது. இந்த நாடுகள் தலையிடாமல் இருந்திருந்தால், இன்று சர்வதேச அரங்கில் தமிழ் இனத்துக்கு என்றொரு இடம் பொறிக்கப்பட்டிருக்கும் என்பதைத் தமிழ் நாட்டில் துணிவோடு வெளிப்படுத்தியவர்தான் தமிழ் மண் பதிப்பகத்தின் நிறுவனர் கோவிந்தசாமி இளவழகன். தமிழகத்தைச் சேர்ந்த உணர்வு மிக்க தலைவர்கள் என்று கூறப்படுவோர் தம் அரசியல் லாபத்திற்காக வடவரோடு இணங்கியும், பதுங்கியும், தன்னல உணர்வு மேலோங்கி இருந்தமையும் ஈழப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததென்றும் பகிரங்கமாகவே கூறியவர் இளவழகன்.
ஏப். 27 11:26

பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் அடுத்ததாகக் குறிவைக்கலாம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவை மட்டுமல்ல முழு உலகையே 2019 இல் உலுக்கிய உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த வெளிச்சக்திகள் எவை, எவ்வாறு அந்தத் தாக்குதல்கள் கனகச்சிதமாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டன, தாக்குதல்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது எவ்வாறு என்பது போன்ற நுட்பவியல், சித்தாந்த, மற்றும் புவிசார் அரசியற்காரணிகள் இதுவரை பொதுவெளியில் தெளிவாக வெளிப்படாத சூழலில், தாக்குதல்களை நடாத்தியவர்களுடைய குடும்பங்களுடன் குடும்ப, தொழில், மற்றும் சட்ட ஆலோசனை உறவுகளைப் பேணியோர் என எழுநூறுக்கும் மேற்பட்டவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறு ஈழத் தமிழர்களை பயங்கரவாதத் தடைச்சட்டம் பல தசாப்தங்களாகக் குறிவைத்ததோ அதேபோல் முஸ்லிம்கள் தற்போது குறிவைக்கப்பட்டுவருகிறார்கள்.
ஏப். 16 15:23

இந்திய அரசு வழங்கிய உழவு இயந்திரங்களுக்கு நடந்தது என்ன?

(மன்னார், ஈழம் ) இலங்கை தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த இறுதிப் போரில் கடும் பாதிப்படைந்த வட மாகாண தமிழ் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட உழவு இயந்திரங்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல கமநல சேவை நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த உழவு இயந்திரங்களில் பலவற்றை, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் நிர்வகிக்கப்பட்ட மன்னார் மாவட்ட முசலி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டன. எனினும் அந்த உழவு இயந்திரங்கள் கடந்த வருடம் முசலி பிரதேச சபையினால் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஏப். 11 15:59

இடம் மாறப்போகும் இனவாதம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஆட்சி மாற்றம் ஒன்றே இலங்கையில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்குமென்ற பொய்மைக்குள் 1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் உட்படப் பலரும் விழுந்தனர். 17 ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி கவிழ்ந்ததால், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பிரச்சனைகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளும் தீர்ந்து வடக்குக் கிழக்கு அடங்கலாக இலங்கைத் தீவு சுபீட்சமடையுமென்ற பிரச்சாரமும் அன்று செய்யப்பட்டிருந்தது. ஆனால் சந்திரிகா பதவியேற்றுச் சில மாதங்களிலேயே மீண்டும் போர் மூண்டது.
மார்ச் 18 23:46

இன அழிப்புக்கு நீதிகோரும் குரல்கள் பிரித்தானிய நாடாளுமன்றில் ஓங்கி ஒலித்தன

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் கிழமை வாக்கெடுப்புக்கு வரப்போகும் இலங்கை நிலைமை தொடர்பான தீர்மான வரைபில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான இறுதித் தவணையும் முடிந்து இரண்டு நாட்களின் பின்னரே பிரித்தானியப் பாராளுமன்றில் வியாழனன்று விவாதம் வந்தது. இதனால் உடனடிப் பலன் இல்லாவிடினும் ஈழத்தமிழர்கள் தொடரவேண்டிய இன அழிப்பு நீதிக்கான போராட்டத்தின் திசை எது என்பது நிரூபணமாகியுள்ளது. இது உலகளாவிய ஈழத்தமிழருக்கு நம்பிக்கை தரும் ஒரு படிப்பினை. சர்வதேச சக்திகளுடன் இணக்க அரசியல் புரிவதை விடவும் இன அழிப்பு நீதிக்கான அறம் சார்ந்த போராட்ட அரசியலையே ஈழத்தமிழர்கள் முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதே பொருத்தமான அணுகுமுறை என்பது ஐயந்திரிபற வெளிப்பட்டிருக்கிறது.
மார்ச் 14 11:33

தமிழர் தாயகத்தின் காணி ஆவணங்கள் அனுராதபுரம் செயலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னணி

இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை ஈழத்தமிழ் அமைப்புகளினால் கோரப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா. பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அதனைப் பொருட்படுத்தாமல், இரு தரப்புக்குமான போர்க்குற்ற பொறுப்புக்கூறலை மாத்திரமே வலியுறுத்தி வருகின்றன இதனால் சிங்கள ஆட்சியாளர்கள் எந்தவிதமான பயமும் இன்றி மிகத் துணிவோடு தமிழர் தாயகத்தின் காணி ஆவணங்களை அதிகாரபூர்வமாக சிங்களப் பிரதேசங்களில் உள்ள மாவட்டச் செயலகங்களுக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் இது ஏலவே நடந்து முடிந்துவிட்டதொரு நிலையில் தற்போது வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பை மையப்படுத்திய காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலேயே இந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
பெப். 25 15:39

இலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழர் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை இந்திய மத்திய அரசு கையில் எடுக்குமானால், சிங்கள ஆட்சியாளர்கள் அடங்கிப்போவதைத் தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இருக்காது. ஆனால் இந்தியா எப்போதுமே இலங்கையின் பக்கம் சார்ந்து செயற்படுவதால். இந்தியா ஒரு வல்லாதிக்க நாடு என்பதையும் கடந்து சிங்கள ஆட்சியாளர்கள் தன்னிச்சையாகவே செயற்படுகின்றனர். அவ்வப்போது இராஜதந்திர ரீதியாக அவமானப்படுத்தியுமிருக்கின்றனர். உதாரணங்கள் பல இருந்தும் கொழும்பில் இந்திய அப்பலோ மருத்துவமனை 2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இலங்கை தனதாக்கிக் கொண்டதைப் பிரதானமாகக் கூறலாம். இந்தியாவோடு செய்யப்பட்ட பல சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் ரத்துச் செய்யப்பட்டமை பற்றிய உதாரணங்களும் உண்டு.