கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜன. 13 22:42

ஆவணத்தைப் பெற முன்னர் இலங்கைக்கான நிதியுதவியை உறுதிப்படுத்தியது இந்தியா

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் சென்ற வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வியாழக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நேரில் சந்தித்து உறுதிப்படுத்தினார். மோடிக்குக் கடிதம் அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட அன்றைய நாளே தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
ஜன. 09 07:30

பிளவுபட்டுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளை இணைந்து கையாளும் வெளிச் சக்திகள்

(முல்லைத்தீவு) பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் பின்னால் இலங்கையின் திட்டமிடலும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் தமிழர்கள் 13 ஐ மாத்திரம் கேட்டால் போதும் என்ற மன நிலை இலங்கையிடம் உண்டு. இதற்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறுபட்ட தமிழ்த்தரப்புகளைக் கையாண்டு எடுக்கப்பட்டிருந்த பல முயற்சிகள் தோல்வி கண்டதன் பின்னணியில், புதிய முயற்சியின் மூலம் இலங்கை ஒற்றையாட்சியை நிலை நிறுத்தக்கூடிய இந்த அணுகுமுறையைச் செயற்படுத்தியிருக்க வாய்பில்லாமில்லை. தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடாமல் தமிழ்த்தேசியக் கட்சிகள் மாத்திரம் கைச்சாத்திட்டுள்ளமையும், குறித்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற வேண்டுமென்ற அவசரத்தையும் காண்பித்திருக்கிறது.
ஜன. 06 22:32

பொது ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் கைச்சாத்திட்டவேளை, திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பு

(முல்லைத்தீவு) மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளைத் தவிர்த்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள பொது ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் இன்று வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ளன. அதேநேரம், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தமும் இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. திருகோணமலையில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எண்ணெயக் குதங்கள் மேலும் 50 வருடங்களுக்கு அதே இந்திய நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜன. 05 08:21

வடக்குக் கிழக்கில் தமிழ்- முஸ்லிம் உறவில் சாணக்கியத்தை இழந்த சாணக்கியர்கள்

(முல்லைத்தீவு) வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்த்தேசியம் என்பதற்கும், தமிழ்-பேசும் மக்களிடையே அகில இலங்கை ரீதியில் இருக்கவேண்டிய குறைந்தபட்சப் புரிந்துணர்வு என்பதற்குமிடையில், ஒன்றை ஒன்று குழப்பாத வகையில் உருவாக்கப்பட வேண்டிய அரசியல் புரிந்துணர்வு, எவ்வாறு இருக்கவேண்டும் என்ற விளக்கங்கள் எதிர்வரும் காலங்களில் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வடக்குக் கிழக்கு மாகாணத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த விடயம் தொடர்பான புரிதலைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
ஜன. 02 21:49

சிறிதரன், சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும், ஒருசேரக் கொடுத்த தமிழ்த் தேசியப் பாடம்

(கிளிநொச்சி, ஈழம்) பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்தித் தருமாறு இந்தியாவிடம் கோருவதை எதிர்த்தால் போதும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்காமல் இருக்கிறோம் என்று பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் மதியாபரணம் சுமந்திரனும் தத்தமது நிலைப்பாட்டை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியிருந்தார்கள். கடந்த வருடம் ஜனவரியில் இன அழிப்பு விசாரணை கோருவதை விட ஜெனீவாவில் இருந்து பொறுப்புக்கூறலை வெளியே எடுத்தாற்போதும் என்று ஆரம்பத்தில் கொழும்பில் பாக்கியசோதி சரவணமுத்துவின் ஒழுங்கில் சந்தித்தபோது உடன்பட்டது போல அன்றி, இம்முறை சற்று வித்தியாசமாக, இவ்விருவரும் ஒரே நிலைப்பாட்டில் நேரடியாகக் கலந்துகொள்ளாமல், முரண்பட்டவாறு உடன்பட்ட விநோதம் நடந்திருக்கிறது.
டிச. 31 22:15

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே இந்திய-இலங்கை ஒப்பந்தமும் 13 ஆவது திருத்தமும்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரியத் தாயகமாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கை நேர்த்தியாக அங்கீகரிக்கவில்லை. வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழிடம் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாட்டையே முன்வைத்தது. கிழக்கில் மட்டும் நிரந்தர இணைப்புக்கான பொதுவாக்கெடுப்பு என்று தமிழ்த் தேசத்தின் நிலவொருமைப்பாட்டைச் சிக்கலுக்குள்ளாக்கியது. அந்த ஒப்பந்தம் 'பல்லின சமூகம்' என்ற சொற்பிரயோகத்தைக் கையாண்டிருப்பதில் ஏதோ விடயம் இருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். ஆனால், அது ஒரு பல்லின சமூகமாக நில அடையாளத்தையும் அர்த்தமற்ற அதிகாரப்பகிர்வினூடாக ஈழத்தமிழர்கள் இழப்பதற்கும் பயன்படக்கூடிய சொற்பிரயோகமே. இதே ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்றும் சிலர் எண்ணுவது வேடிக்கையானது.
டிச. 22 22:40

'தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்'

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரி இந்திய பிரதமரிடம் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சிகள் இழுபறியில் இருப்பதாகத் தமிழத்தேசியக் கூட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன. ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் மூன்று கட்டங்களாக இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய ஐந்து பக்கம் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு அது தொடர்பாக மீள் ஆய்வு செய்வதென நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பில் முடிவெடுக்கப்பட்டன. இன்று அல்லது நாளை வியாழக்கிழமை குறித்த ஆவணத்தில் கையொப்பமிடப்படுமென நேற்றைய கூட்டத்தின் முடிவின் பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
டிச. 12 23:15

தேசம், சுயநிர்ணய உரிமை நீக்கம்- பிரித்தாளும் தந்திரத்திற்குள் தமிழர் அரசியல்

(முல்லைத்தீவு) அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவிடம் ஒருமித்த குரலில் கோரவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் இனப் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் ஆனால் அதனை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இன்றைய சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமை தாங்கினார்.
டிச. 11 15:19

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை சொல்வதும், சொல்லாது சொல்வதும்

(கிளிநொச்சி, ஈழம்) போர் இல்லாதொழிக்கப்பட்டதொரு சூழலில், இலங்கை ஒற்றையாட்சி அரசு விரும்பும் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற முறையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை தென்படுகிறது. இலங்கை இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு பேருடைய தடைகள் மட்டுமல்ல, இதற்கு அப்பாற்பட்ட பல நடவடிக்கைகளும் இலங்கைப் பொறுப்புக்கூறல் தொடர்பாக அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளதாக அறிக்கை வெளிப்படுத்துகின்றது. அதாவது தமிழர் தரப்பு மீதும் தடைகள் வரலாம் என்பதும், மீண்டும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா ஒபாமா காலத்து அணுகுமுறையைத் தொடரவுள்ளது என்பதுமே அதன் அர்த்தமாகும்.
நவ. 30 09:20

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்- வெளிப்படுத்தப்பட்ட கூட்டுரிமையும் மறைக்கப்பட்ட அடையாளங்களும்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடந்த சனிக்கிழமை மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பொது மக்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் நிகழ்வுகளில் பங்கேற்றனர். இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மக்கள் துணிவோடு நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டுத் தமது கூட்டுரிமையை வலியுத்தியிருக்கிறார்கள். ஆனால் சிவப்பு- மஞ்சள் நிறக் கொடி, கார்த்திகைப் பூ போன்ற மாவீரர் நாளுக்குரிய அடையாளங்கள் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. சட்டப் பாதுகாப்போடு தமிழ்த் தேசியக் கட்சிகளின் சில பிரதிநிதிகள் இம்முறை நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்து முடித்திருக்கிறார்கள் என்பதே இதன் வெளிப்பாடு.