ஜன. 30 03:39
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் இந்தியாவின் அல்லது மோடியின் சொல்லுக்கும் விருப்புக்கும் மட்டும் இயங்கும் நிலையில் உள்ள ஓர் அரசியல்வாதி அல்ல. ஆனால், தனது கட்சியிலும், கூட்டிலும் கலந்தாலோசிக்காது, அதுவும் சம்பந்தனும் சுமந்திரனும் முடிவு எடுக்க முன்னதாக, அவர் ஏன் பதின்மூன்றை ஆரம்பப் புள்ளியாகக் கொள்வதாகத் திண்ணைக் கூட்டத்தில் தனது கட்சியைப் பங்கேற்கச் செய்தார், ஏன் கடைசிவரை காத்திருக்காது அவசரப் பட்டார் என்றும், இந்தியாவை விடவும் வேறு எங்கேனும் இருந்து அவருக்கு அறிவுறுத்தல் வந்தமையாற் தான் அவர் அவ்வாறு செய்தாரா என்றும் அரசியல் வட்டாரங்களிற் கேள்விகள் எழுந்துள்ளன.