(கிளிநொச்சி, ஈழம்)
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைகள் சர்வதேச மட்டத்தில் அதிகளவு பேசப்பட்டு முக்கியத்துவம் பெறுகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், சிங்கள பௌத்த தேசம் ஏதோவொரு வகையில் தன்னை மீளக் கட்டமைக்கின்றது. பௌத்த தேசிய அரசியல் தலைவர்களிடையே வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் விடயத்தில் உடன்பாடாகிவிடுகின்றனர் என்பதற்கு கோட்டாபாய ராஜபக்ச முன்னிலையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியேற்றமை மாத்திரம் உதாரணமல்ல. 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமான காலத்தில் இருந்து அந்த உதாரணங்களைக் காணலாம்.