கட்டுரை: நிரல்
ஜூன் 16 00:05

பொருண்மிய நெருக்கடியையும் பயன்படுத்திப் பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கையை முற்றாக விடுவிக்க பீரிஸ் முழு முயற்சி

(கிளிநொச்சி, ஈழம்) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்குள், ஈழத்தமிழர் விவகாரத்தை ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையில் இருந்து கனகச்சிதமாக நீக்கிவிடச் செய்யும் முனைப்பில், உண்மைக்கு மாறான திரிபுபடுத்திய தகவல்களை ஐம்பதாவது கூட்டத் தொடரில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 13 ஜூன் திங்களன்று உரையாற்றும்போது முன்வைத்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை வகிக்கும் பின்னணியில், சா்வதேச தரப்புகள் தமது வாதங்களை 2002 பேச்சுவார்த்தைக் காலத்தைப்போல நம்பும் என்ற எதிர்பார்ப்போடு அமைச்சர் பீரிஸ் பொறுப்புக்கூறல், சாட்சியப் பொறிமுறை பற்றிய கருத்துகளை கடும் தொனியில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது முன்னரைப் போலன்றி இம்முறை ஈழத்தமிழர்களுக்கு மிக ஆபத்தான வியூகமாகிறது.
ஜூன் 13 22:27

ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் இந்திய எதிர்ப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அமெரிக்க- இந்திய அரசுகள் தமது புவிசார் நலன்களைப் பெறும் திட்டங்களையே செயற்படுத்த முற்படுகின்றன என்பதை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின்போது அறிந்துகொள்ள முடிந்தது. இலங்கைத்தீவில் மின் சக்தி எரிசக்தித் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்திடம் கையளிக்கும் யோசனைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நேரடியாக எதிர்ப்பு வெளியிடவில்லை. ஆனாலும் அதானி நிறுவனம் தொடர்பாக சஜித் பிரேமதாசாவின் கட்சி முன்வைக்கும் விமர்சனம், இந்தியாவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற செய்தியைப் பகிரங்கப்படுத்துகின்றது.
ஜூன் 09 10:59

இந்தியத் தூதரக, புலம்பெயர் உதவியின் மத்தியிலும் யாழ் வைத்தியசாலையின் மருந்துக்கையிருப்பு ஊசலாட்டம்

இலங்கைத் தீவைக் கடுமையாகத் தாக்கியுள்ள பொருண்மிய நெருக்கடிக்குள், குறிப்பாக மருந்துக்கொள்வனவுக்கான அந்நியச் செலாவணித் தட்டுப்பாட்டின் மத்தியில், இந்திய தூதரகத்தின் ஊடான உதவியூடாக ஓரளவு மருந்துவகைகள் கிடைக்கப்பெற்றுள்ளமையோடும், புலம்பெயர்ந்துவாழும் கொடைக்குணமுள்ளோரின் உதவியோடு தீவுக்குள்ளேயே அடிப்படைத் தேவைக்கான கையிருப்புகளைக் கொள்வனவு செய்தும், தனது அடிப்படை மருந்துக் கையிருப்பை யாழ் போதனா வைத்தியசாலை மயிரிழையில் சமாளித்துவருகிறது. மாத அடிப்படையில் அன்றி வாராந்த அடிப்படையில் கையிருப்பை இதுவரை நுட்பமாகக் கையாண்டு வந்த போதிலும் பெருத்த சவாலை வைத்தியசாலை எதிர்கொள்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி கே. நந்தகுமாரை கூர்மை தொடர்பு கொண்டபோது அவர் விரிவாக எடுத்தியம்பினார்.
ஜூன் 08 08:45

கருணைக் கொலை செய்துவிடுமாறு கேட்குமளவுக்குத் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்களின் அவலம்

(வவுனியா, ஈழம்) தமிழ் நாடு திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள சிறப்பு முகாம் எனப்படும் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள் பதினேழுபேர் இருபது நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கு விசாரணைகள் முடிவடைந்து விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் பலர் தம்மை விடுதலை செய்து உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கோரியுள்ளனர். சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாம் அதிகாரிகள் தம்மைத் துன்புறுத்துவதாகவும், தேவையற்ற முறையில் ஒருவர் மீது பல வழக்குகளைத் தாக்கல் செய்து தொடர்ந்தும் தம்மைத் தடுத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ள இளைஞர்கள், வேதனை தாங்க முடியாததால் தங்களைக் கருணைக் கொலை செய்யுமாறும் கோரியுள்ளனர்.
ஜூன் 06 08:02

ஒட்டுமொத்த உறவை ஒருமித்த குரலில் உருவாக்க முடியாத தமிழ்த் தேசியக் கட்சிகள் 21 பற்றிக் கூடி ஆராய்வதில் பயனில்லை

(கிளிநொச்சி, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றபோது, அமைதிகாத்த ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், தற்போது ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சரவைக்குள் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். இலங்கைக்கு நிதி வழங்க வேண்டுமானால், அரசியல் ஸ்திரத் தன்மையும், (Political Stability) உறுதியான பொருளாதாரத் திட்டங்களை (Economic mechanism) முன்மொழிய வேண்டுமென உலக வங்கி, சர்வதே நாணய நிதியம் உள்ளிட்ட நிதி வழங்கும் நிறுவனங்கள் கடும் அழுத்தங்கள் கொடுத்து வரும் நிலையில், மீண்டும் அரசியல் குழப்பங்களை உருவாக்கும் அரசியல் கைங்கரியங்கள் ஆரம்பித்துவிட்டன போலும். இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நியமன விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்சவுடன் முரண்பட்டுள்ளார்.
ஜூன் 05 21:33

ஈழத்தமிழர் தொடர்பான டில்லியின் கொள்கைக்கு உரமூட்டுகிறாரா தமிழக முதல்வர் ஸ்ராலின்?

(வவுனியா, ஈழம்) ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் செயற்பாடுகள் போன்றே ஸ்ராலின் தலைமையிலான தமிழக அரசின் செயற்பாடுகளும் அமைவதுபோல், சமீபகாலச் செயற்பாடுகள் காணப்படுகின்றன. புதுடில்லியில் உள்ள அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இலங்கைக்கான தூதுவர் மிலிந்த மொறகொட சனிக்கிழமை சென்னையில் தமிழக முதலமைச்சர் மு,க.ஸ்ராலினைச் சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகள் தொடர்பாகவும், தமிழக அரசு மேலும் வழங்கவுள்ள உதவிகள் குறித்துமே இருவரும் உரையாடியிருக்கின்றனர். அத்துடன் இலங்கைக்கு பயணம் செய்யுமாறு மிலிந்த மொறகொட ஸ்ராலினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கொழும்பில் உள்ள நியூஸ்பெஸ்ட் (newsfirst.lk/tamil) என்ற இலத்திரனியல் ஊடகம் கூறுகின்றது.
மே 27 22:53

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சியை முற்றாக நீக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ள அதிகாரங்கள் சிலவற்றை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்தும் 21 ஆவது திருத்தச் சட்டத்துக்கான நகல் வரைபு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழிப்பது தொடர்பாக ஆராயக் குழு ஒன்றை அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 21 இற்கான நகல் வரைபு தொடர்பாக ஆராயும் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. இன்றைய கூட்டத்தின் மூலம், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை முற்றாக நீக்கம் செய்யப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதைப் பிரதான சிங்களக் கட்சிகள் முன்வைத்த கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.
மே 24 23:14

21 ஆவது திருத்தத்துக்குள் மறைந்திருக்கும் பேராபத்து

(யாழ்ப்பாணம், ஈழம்) கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்தில் சில விடயங்களையும் உள்ளடக்கியே 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல்வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நகல்வரைபு, கோட்டாபய ராஜபக்சவுடன் முரண்பட்டு வெளியேறித் தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றுள்ள சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழுவினாலேயே தயாரிக்கப்பட்டிருக்கின்றது. விஜயதாச ராஜபக்சவுக்கு நெருக்கமான இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் சில சட்டத்தரணிகளும் நகல் வரைபு தயாரித்த குழுவில் அங்கம் வகித்திருக்கின்றனர். இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்தும் துணிகரம் இந்த நகல் வரைபில் தெரிகிறது.
மே 21 21:05

மீள் எழுச்சி பெறப்போகும் சிங்கள மேட்டுக்குடி அரசியல்- சர்வதேச அரங்கில் மீண்டும் தமிழ்த்தேசத்துக்கு வரப்போகும் ஆபத்து

(முல்லைத்தீவு) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்குப் பதவியில் இருந்த அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் பொறுப்பேற்க வேண்டுமென்ற கருத்துக்களை மறுத்துரைக்க முடியாது. ஊழல்மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் நீடிப்பதற்கும் அவை இலங்கை அரசின் ஒரு பகுதிபோன்று மாறுவதற்கும் முப்பது ஆண்டுகால போர் வழிவகுத்து என்பதே மூல காரணம். ஆனால் இதனைச் சிங்கள அரசியல் தலைவர்களும், சிங்கள முற்போக்குவாதிகள் பலரும் ஏற்க மறுத்துள்ளதொரு சூழலில் சிங்களச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது முற்கால அரசியல் நகர்வுகளை நியாயப்படுத்தும் செயற்பாடுகளில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகின்றார். எழுபது வருடகால இனப்பிரச்சினை மடைமாற்றப்படுகின்றது.
மே 20 22:45

அரச ஊழியர்களின் எண்ணிகை 13 பேருக்கு ஒருவர், இதுவே பாரிய சிக்கல் என்கிறார் அலி சப்ரி

(வவுனியா, ஈழம்) ராஜபக்ச குடும்பத்துக்கும் அவர்களுக்கு ஆதரவான உறுப்பினர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படட தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சூடான விவாதம் நடைபெற்றது. வன்முறைகளில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென அரசதரப்பு உறுப்பினர்களான அஜித் ராஜபக்ச, தினேஸ் குணவர்த்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகைக்குக் குண்டர்களை அழைத்து வந்து கூட்டம் ஒன்றை நடத்திவிட்டு காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாலேயே வன்முறைகள் ஆரம்பித்ததாக சரத் பென்சேகா. ஜயமான பண்டார ஆகியோர் குற்றம் சுமத்தினர்.