கட்டுரை: நிரல்
ஏப். 24 09:59

வடக்குக் கிழக்கு மக்கள் ஏன் பங்கெடுக்கவில்லை?

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மற்றும் விலைவாசி உயர்வு நெருக்கடிகளினால், சிங்கள மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ற மார் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பித்த எதிர்ப்புப் போராட்டம், தற்போது தீவிரமமைடந்து வரும் நிலையில். வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள், சிங்கள மக்களின் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
ஏப். 23 20:53

விசாரணைகளின் உண்மைத் தன்மை என்ன?

(மன்னார், ஈழம்) இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று இன்று 21 ஆம் திகதியுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதையடுத்து இன்று நாடெங்கிலும் இச்சம்பவத்தில் பலியானவர்களின் ஆத்ம சாந்திவேண்டி பல ஆலயங்களில் ஆராதனைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படல் வேண்டும் எனும் கோரிக்கைகள், கடந்த சில மாதங்களாக, நாடளாவிய ரீதியில் வலுப்பெற்று, ஓங்கி ஒலித்த நிலையில் மேற்படி கோஷங்கள் யாவும் தற்பொழுது வலுவிழந்து அநேகராலும் மறக்கப்பட்ட ஒன்றாகவுள்ளது.
ஏப். 13 15:54

இலங்கை அரச கட்டமைப்பை மாற்றுவதே நோக்கம் என்றால், சிங்கள மக்கள் பகிரங்கமாக அழைக்க வேண்டும்

(முல்லைத்தீவு) தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இரு பிரதான காரணங்கள் உண்டு. ஒன்று முப்பது ஆண்டுகால போரும் அதன் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகளில் வடக்குக் கிழக்கில் இராணுவ மற்றும் சிங்கள மயமாக்கல் மற்றும் முஸ்லிம்களின் பொருளாதாரக் கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்கள். இரண்டாவது பெருமளவு அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் தேயிலை உற்பத்தி 1986 ஆம் ஆண்டில் இருந்து இரண்டாம் இடத்திற்குத் தள்ளியமை. குறிப்பாக 1947 இல் இருந்து உருவாக்கப்பட்ட அரசியல். பொருளாதாரத் திட்டங்கள் இனவாத நோக்கில் அமைந்தமையே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று சிங்களப் பேராசிரியர் அசோக லியனகே கொழும்புரெலிகிராப் என்ற ஆங்கில செய்தித் தளத்தில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி எழுதிய தனது கட்டுரையில் கூறுகின்றார்.
ஏப். 09 16:42

சவேந்திர சில்வாவைத் தடை செய்த பொம்பியோ, கோட்டா கொடுத்த பரிசைக் கைவிட்டார்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜோ பைடன் நிர்வாகத்துக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளராகப் பதவி வகித்திருந்த மைக் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வழங்கிய சுமார் இரண்டாயிரத்து இருநூறு அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள பரிசுப் பொருள் ஒன்றை தான் எடுத்துக் கொள்ளாமல் இராஜாங்கத் திணைக்களத்திடமே ஒப்படைத்திருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஆசிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த மைக் பொம்பியோ, இலங்கைக்கும் வருகை தந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போதே இந்தப் பெறுமதியான பரிசுப்பொருள் வழங்கப்பட்டிருக்கின்றது.
ஏப். 07 14:41

'கோட்டா வீட்டுக்குப் போ' என்பதல்ல, மகாவம்ச மன நிலையில் இருந்து சிங்கள மக்கள் விடுபட வேண்டும்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுகளினால் சிங்கள மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர் என்று கூறினாலும், மகாவம்ச மனநிலையில் இருந்து அவர்கள் முற்றுமுழுதாக விடுபட்டால் மாத்திரமே, உண்மையான மாற்றத்தைக் காண முடியும். போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள மக்கள் ஒவ்வொருவரும் கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனக் (GoHomeGota) கோசமிடுகின்றனர். ஆனால் கோட்டாபய வீட்டுக்குச் சென்றுவிட்டால் மாத்திரம் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது. ஏனெனில் 1947 ஆம் ஆண்டில் இருந்து இலங்கைத்தீவில் வகுக்கப்பட்ட அரசியல், பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் சிங்களத் தேசியவாதத்தைக் கருவாகக் கொண்டிருந்தமையே பிரதான காரணம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
மார்ச் 29 09:07

தமிழ்த் தரப்புகள் தமக்குள் இணைந்தே இந்தியாவையும் மேற்கையும் கையாளவேண்டும்

(யாழ்ப்பாணம், ஈழம்) பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்பதற்கு முன்னர் கடந்த வருடம் யூன் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை இலங்கை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காக உருவாக்கிய வலைப்பின்னல் தற்போது பட்டவர்த்தனமாகியுள்ளது. இச் சூழலில் தமிழர் தரப்புக்குள், இந்தியாவையும் மேற்கையும் நோக்கி இணைந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும். சுமந்திரன்-செல்வம் பிளவு மட்டுமல்ல, ஜெனீவாவை நோக்கி முன்வைக்கப்பட்ட இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணை பற்றிய கோரிக்கை இந்தியாவிடம் முன்வைக்கப்படவில்லை. அதைப் போல, ஒற்றையாட்சி நிராகரிப்பு இன்றி, 13 ஆம் திருத்தம் என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தவறு நடந்துள்ளது. இந்தத் தவறுகள் உடனடியாகத் திருத்தப்படவேண்டும்.
மார்ச் 22 20:59

உக்ரெய்ன் போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் புவிசார் அரசியலும், ரசியா-சீனா தொடர்பான இந்திய வில்லங்கமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) 1980களில் பனிப்போர் காலத்தில் இந்தியா எப்படி ரசியாவுடன் மறைமுகப் புரிந்துணர்வைப் பேணியதோ, அதேபோன்று விரும்பியோ விரும்பாமலோ ரசியாவுடனும் ரசியா ஊடாகச் சீனாவுடனும் இராஜந்திர உறவைப் பேண வேண்டிய நிலையை இந்தியாவுக்கு உக்ரெயன் போர் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இலங்கை அமெரிக்காவின் பக்கம் செல்லும் நிலையும் ஏற்படலாம். ஆகவே ஈழத்தமிழர்கள் தமது அதி உச்சக் கோரிக்கையை இந்தியாவிடம் கூட்டாக முன்வைக்க வேண்டியதொரு காலகட்டத்தையே உக்ரெயன் போரக்குப் பின்னரான சூழல் உருவாக்கியுள்ளதை உணர்ந்துகொள்ள வேண்டும். எந்தவிதமான ஐயத்துக்கும் இடமின்றித் தமது கோரிக்கைகளைத் தெளிவாக முன்வைக்க வேண்டிய பொறுப்பை கருத்துருவாக்கிகள், சிவில் சமூக அமைப்புகள் விரைந்து கையாளவேண்டும்.
மார்ச் 20 15:48

குழப்பமான கருத்துக்களை முன்வைக்கும் சிவாஜிலிங்கம் தமிழ் நாட்டில் என்ன சொல்லப் போகின்றார்?

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர் அரசியல் விடுதலை தொடர்பான கருத்துக்களில் அவ்வப்போது குழப்பமான நிலைப்பாட்டோடு செயற்பட்டு வரும் இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் நாட்டில் எவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போகின்றார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு எதிரானவர் என்று கூறிக்கொண்டு, தற்போது தமிழ் நாட்டுக்குச் சென்றுள்ள சிவாஜிலிங்கம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நியாயப்படுத்தி பேசவுள்ளதாகவே அவரது கூட்டமைப்பின் வட்டாரங்கள் கூறுகின்றன.
மார்ச் 19 23:37

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து சர்வகட்சி மாநாடாக அனைத்துக் கட்சிகளோடும் பேசத் திட்டம்

(வவுனியா, ஈழம்) அமெரிக்க- இந்திய அரசுகளின் நகர்வுகளின் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அதிகாரப் பரவலாக்கம் பற்றி உரையாடவிருந்த நிலையில், சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். சென்ற 15 ஆம் திகதி புதன்கிழமை சந்திக்கவிருந்த நிலையிலேயே சந்திப்புத் திடீரென பிற்போடப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி சந்திப்பதென கூறப்பட்டிருந்தது. இந்தவொரு நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துக் கோட்டாபய ராஜபக்ச உரையாடவுள்ளதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.
மார்ச் 17 23:41

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்கள் அடகுவைக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு இந்தியா நிதியுதவி

(யாழ்ப்பாணம், ஈழம்) புதுடில்லிக்குச் சென்ற இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து உரையாடிய பின்னர் தமிழ்- முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கில் உள்ள வளமுள்ள பிரதேசங்களை இந்தியா கையாள்வதற்குரிய வசதிகளுக்கான வாக்குறுதிகளை நேரடியாகவே வழங்கியுள்ளார். இதன் பின்னரே இலங்கைக்கு ஒரு பில்லியன் நிதியுதவி வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா இலங்கையுடன் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக புதுடில்லியும் கொழும்பும் செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தாலும் முழுமையான விபரங்கள் அதில் இல்லை. ஆனாலும் டில்லி உயர்மட்டத்தில் இருந்து சில விடயங்கள் கசிந்திருக்கின்றன.