கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜூலை 07 22:54

நியூயோர்க் ரைம்ஸ் செய்தி குறித்த மூலத்தை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் செலவுக்காக மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு சீனா 7.6 மில்லியன் ரூபாய்கள் கொடுத்ததாக அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ் கடந்த 25 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தி இலங்கைப் பத்திரிகைகளில் வெளியாகி பின்னரே மஹிந்த ராஜபக்க்ஷவும் மறுத்திருந்தார். சீன அரசாங்கமும் அதிகாரபூர்மாக அந்தச் செய்தியை நிராகரித்தது. இந்த நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையிடம் இருந்து ஆதாரங்களைக் கோரியுள்ளது. நிதி வழங்கல் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துவதற்கு வசதியாக குறித்த செய்தி தொடர்பான அடிப்படை மூலங்கள் அவசியம் என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூலை 03 23:51

விஜயகலா பேசியதைத் தமிழர்கள் யாரும் கண்டு கொள்ளவேயில்லை- ஆனால் கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறிய கருத்து, முன் சிந்தனையில்லாத தனிப்பட்ட அரசியல் நோக்கம் கொண்டது என்பதை தென்னிலங்கையில் உள்ள சில பிரதான சிங்கள அரசியல்வாதிகளுக்குப் புரியும். ஆனாலும், அவசர அவசரமாக விஜயகலாவை அமைச்சுப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு உத்தரவிட்டு, இலங்கைச் சட்ட மா அதிபர் மூலமாக விசாரணை நடத்த எடுக்கப்பட்ட முடிவு பௌத்த சிங்கள பேரினவாத கண்ணோட்டத்துடன் அமைந்ததாகவே கருதப்படுகின்றது. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மேலும் பாதுகாக்கும் நேக்கில் கட்சி வேறுபாடுகள் இன்றி சிங்கள பௌத்த பேரினவாதம் ஒன்று சேர்ந்து எடு்க்கும் நடவடிக்கை என இலங்கை நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கூறினார்.
ஜூன் 29 08:41

தனித்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஐக்கியதேசியக் கட்சி- மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவும் ஏற்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) அடுத்த ஆண்டு முற்பகுதியில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மைத்திரிபால சிறிசேன முற்பட்டு வரும் நிலையில், ஆண்டின் இறுதியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். இதனிடையே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஐக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 23 22:35

கோதபாஜவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக்க அமெரிக்கா இரகசிய நகர்வா?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் இராணுவ ஆட்சியை மகாநாயக்க தேரர்கள், பௌத்த அமைப்புகள் விரும்புகின்றனவா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. இலங்கை இராணுவத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி, தற்போதைய அமைச்சர் பீலட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கியதேசியக் கட்சி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கியது ஒரு சக்தி. ஆனாலும் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். சரத்பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடிந்தது என்றால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாஜ ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஏன் நிறுத்த முடியாது என மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் பௌத்த அமைப்புகள் தீவிரமாக யோசிப்பது வெளிப்படையாகிறது.
ஜூன் 20 16:01

மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்கள்

(வவுனியா, ஈழம் ) வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களை பிரிக்கும் நோக்கில், இலங்கையில் 1941 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்லோயா அபிவிருத்தி திட்டம், முதலாவது சிங்களக் குடியேற்றமாகும். 1949 ஆரம்பிக்கப்பட்ட அல்லைத்திட்டம், 1950 இல் உருவாக்கப்பட்ட கந்தளாய் திட்டம், 1954இல் பதவியாத்திட்டம், முதலிக்குளம் என்ற தமிழ்ப் பிரதேசத்தில் 1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மொறவேவாத்திட்டம், பெரியவிளாங்குளம் என்ற தமிழ்ப் பிரதேசத்தில் 1979 ஆம் ஆண்டு கொண்டவரப்பட்ட மகாதிவூல்வௌ திட்டம் என்ற சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில், பிரதேசங்களை தூண்டு துண்டாக உடைக்கும் நோக்கம் கொண்டவை.
ஜூன் 16 23:07

சென்னை மாநாடு: இலங்கையில் நடைபெற்றது உள் நாட்டுப் போர் அல்ல; இன அழிப்புக்குப் பலர் பொறுப்பு

(சென்னை, தமிழ் நாடு) தமிழ்நாடு, சென்னையில் ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியாவினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஈழத்தமிழர்களுக்கான குற்றவியல் நீதியும், ஈடுசெய் நீதியும் மறுக்கப்படக்கூடாது, இலங்கையே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் உள்ளக விசாரணை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 13 08:42

தமிழ் முஸ்லிம் முரண் நிலையைத் தூண்டி, உரிமைப் பயணத்தைச் சிதைக்கச் சில்லறைச் சதி

(வவுனியா, ஈழம்) ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரயத்தனமும், அதற்கு ஏதுவாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஊக்குவிப்பதும் இலங்கை அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று பிரபல கல்வியாளர்களும், தமிழ்ச் சட்டத்தரணிகளும் தெரிவித்துள்ளனர். இந்துசமய விவகாரப் பிரதியமைச்சராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமை குறித்து யாழ் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர்களான கலாநிதி கே.ரி கணேசலிங்கம், கலாநிதி எஸ்.ரகுராம், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் மற்றும் சட்டத்தரணிகளான காண்டீபன், சத்தியகுமார் ஆகியோர் கூர்மை செய்தித் தளத்திற்குக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனிடையே இந்த நகர்வுகளின் பின்னணிகள் பற்றிய அறிவின் தேவை மேலும் அதிகரித்துள்ளது.
ஜூன் 11 08:02

இலங்கை பிரதான மூலோபாய அமைவிடம் என்கிறார் சீன வங்கி முகாமையாளர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) சீன அரசுக்கான மூலோபாய அமைவிடமாகவும் ஏனைய வர்த்தக செயற்பாடுகளுக்கும் இலங்கையை சீனா, தனது பிரதான மையமாக மாற்றி வருவதாகவும் கூறியுள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, 2015ஆம் ஆண்டு நல்லாட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மைத்திரி ரணில் அரசாங்கமே அதற்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார். அதேவேளை மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியிலேதான் சீன முதலீடுகளுக்கான அதிகளவு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்
ஜூன் 09 14:07

வானளாவிய தொடர்புக் கோபுரத்தில் வேலைக்குச் சென்ற தமிழ் மாணவன் தவறி விழுந்து பரிதாப மரணம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் அனுமதியுடன் தீவின் தென்பகுதியை மையமாகக் கொண்டு சீனா பல்வேறு கட்டுமானங்களை நிறுவி வருவது தெரிந்ததே. இந்தவரிசையில் கொழும்பின் மருதானையில் 350 மீற்றர் உயரம் கொண்டதாக, தாமரைக் கோபுரம் (Lotus Tower) என்ற பெயரில் அமைக்கப்பட்டு வரும், தொடர்பாடல் கட்டடத்தில் இணைப்பு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 19 வயது தமிழ் மாணவன் தற்காலிக மின்தூக்கி ஒன்றிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நடந்திருக்கிறது. தமிழர் தாயகப் பகுதியான கிளிநொச்சியின் மத்திய கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞான பாடகல்வி கற்கும் கோனேஸ்வரன் நிதர்ஷன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் என்று கொழும்பில் மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 07 12:06

பாரிய கொழும்புத் துறைமுகப் பட்டினத்துக்கு விசேட சட்டமூலம், தனியான பிரதேசமாக அங்கீகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) சீன அரசின் நிதியுதவியுடன் கொழும்பு போட் சிற்றி (Colombo Port City) என அழைக்கப்படும் பாரிய பட்டின நிர்மாணிப்புக்கு ஏற்ப, இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் தனியான சட்டமூலம் ஒன்று இணைக்கப்படவுள்ளது. நகல் சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை, சீன சட்ட வல்லுநர்கள் நகல் சட்ட வரைபை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சட்டமூலத்தின் ஊடாகக் கடலில் மண்ணால் நிரப்பப்பட்ட 269 ஹெக்ரேயர் நிலம் விசேட பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டு தனி நிர்வாகம் ஒன்று அங்கு இயங்கவுள்ளது. கொழும்பின் அதி பிரமாண்ட வர்த்தகப் பட்டினத்தைத் தீர்மானிக்கும் வெளிச்சக்தி எதுவோ அதுவே முழு இலங்கைத்தீவையும் கேந்திரரீதியாகக் கட்டுப்படுத்தும் என்று சீனா கருதுகிறது.