டிச. 20 12:22
(யாழ்ப்பாணம், ஈழம் )
ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில் இலங்கையில், கடந்த ஐம்பது நாட்களாக நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளததாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அறிக்கை வெளியிட்டு பெருமைப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி உறுப்பினர் சுமந்திரன். சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரின் கடும் முயற்சியினால் இலங்கை உயர் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இலங்கை அரச வர்த்தமானி இதழுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி மீண்டும் நாடாளுமன்றம் செயற்படுவதற்கு அனுமதியளித்துள்ளது. இது குறித்து பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களே பெருமைப்பட்டுள்ளனர். இந்தியா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளுக்கும் தமிழரசுக் கட்சியின் இப் பங்களிப்பு நன்கு தெரியும்.