கட்டுரை: நிரல்
டிச. 28 07:16

அமெரிக்க - இந்திய இராஜதந்திர நகர்வுகளை அவதானிக்கும் அநுர

(வவுனியா, ஈழம்) அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அமைவதற்கு முன்னராகவே அமெரிக்க - இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தனிக் கவனம் இலங்கை மீது அதிகரித்திருந்தது. அநுர ஜனாதிபதியான பின்னரும் இந்த நாடுகளின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் அநுர ஆட்சிக்குப் புதியவர் என்ற கோணத்தில் சில பரிந்துரைகளை இந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்க இந்திய அரசுகள் வழங்கியிருந்தன. குறிப்பாக மீள் நல்லிணக்கம் என்பதும் அரசியல் தீர்வு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் போன்ற சர்வதேசச் சொல்லாடல்களுக்கு உரிய பரிந்துரைகள், அநுர அரசாங்கத்தக்கு வழங்கப்பட்டிருந்தன.
டிச. 22 10:19

ஸ்ராலினுக்கு நோகாமல் பேசிய கஜேந்திரகுமார்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு. ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது. அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக "இலங்கை அரசு" என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று உதவியளிக்கும். 2009 இல் கூட இதுதான் நடந்தது. அதாவது, கட்சி அரசியல் குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் சாணக்கியம், ரணில் விக்கிரமசிங்கவின் உலக அரசியல் அறிவு, சஜித் பிரேமதாசாவின் அரசியல் நுட்பம் என்ற கோணங்களில் இந்த நாடுகள் உதவியளிப்பதில்லை.
செப். 13 19:14

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் (Cricket) விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன. சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர் 'தமிழ் மக்களுக்கு நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்' என்பதை உலகிற்கு காண்பிக்கும் நோக்கில் மாத்திரமே அபிவிருத்தி என்ற மாயை உருவெடுத்திருக்கிறது.
ஜூன் 07 21:15

திம்புக் கோட்பாட்டை முதன்மைப்படுத்துவாரா கஜேந்திரகுமார்? சுரேஸ் - சித்தார்த்தன் - செல்வம், நிலைப்பாடு என்ன?

(முல்லைத்தீவு, ஈழம்) அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் தயாரித்த நகல் வரைபுகள் மற்றும் 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கம் தயாரித்த வரைபுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்புக்கான நகல் தயாரிக்கப்படவுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சட்டத்தரணிகள் குழு புதிய யாப்புக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் பணிகள் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மார்ச் 17 18:29

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இன அழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

(வவுனியா, ஈழம்) போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் பல காரண - காரியங்கள் உண்டு. இதனை மூன்று வகையாக நோக்கலாம். ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பட்டலந்த வதை முகாமுடன் இருந்த தொடர்பு. இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்கவை ஜனநாயகவாதி எனவும் இனப் பிரச்சினைக்கு அவரால்தான் தீர்வை முன்வைக்க முடியும் என்றும் நம்புகின்ற மற்றும் அவருக்காக பிரச்சாரம் செய்கின்ற தமிழர்களின் மன நிலை பற்றியது.
ஜன. 07 08:02

தமிழ்த் தேசியப் பரப்பின் கவனத்தை ஈர்த்துள்ள பேராசிரியர் ரகுராமின் உரை

(யாழ்ப்பாணம், ஈழம்) மாற்றங்களுக்கும் ஏமாற்றங்களுக்குமிடையே நம்பிக்கை தரும் ஓர் உரையாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் ஞாயிறன்று ஆற்றிய மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரை அமைந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வில் இம்முறை மக்கள் முன்னணி முன்வைத்துள்ள தமிழ் மக்கள் பேரவையின் திட்டத்தில் உள்ள குறைபாட்டையும் சுட்டிக்காட்டிய ரகுராமின் உரை பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. செல்வராஜா கஜேந்திரன் வழங்கிய நன்றியுரையில் அவற்றை வரவேற்றும் உள்ளார். இந்த வரவேற்பு உண்மையான சுயவிமர்சனங்களுக்கு இடங்கொடுக்கும் மாற்றத்திற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜன. 04 20:57

பத்து ஆண்டுகளின் பின் மீண்டும் ஈழத்தமிழர் தரப்பை மேற்கின் ஆழ்நிலைத் தரப்புகள் குறிவைக்கின்றன

(யாழ்ப்பாணம், ஈழம்) 2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு நாடுகளின் தரப்புகள் கணிப்பிட்டன. ஏனெனில், வெறும் மனித உரிமை மீறல்களாகவும், போர்க்குற்றங்களாகவும், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்களாகவும் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளையும் குற்றங்களிற் சமப்படுத்தி தமது புவிசார் நலன்களுக்கு ஏதுவான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் தமது நிகழ்ச்சிநிரலுக்கு நேர் முரணான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் விடுதலை அரசியலில் உயிர்த்தெழச் செய்யும் வலு அந்த வட மாகாணசபைத் தீர்மானத்துக்கு இருந்தது.
ஒக். 02 18:47

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த பொதுக்கட்டமைப்பினர் பொறுப்புக்கூறலுக்குரியவர்கள்

(மட்டக்களப்பு, ஈழம்) 'தானாடா விட்டாலும் தசையாடும்' என்பது போல் ஈழத்தமிழர் தேசத்தினர் மீண்டும் தமது உரிமைக்காக எழுச்சிபெற்று அணிதிரள்வார்கள் என்பதை ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தின் ஊடாக நிறுவினார்கள். இருப்பினும், வடக்கு-கிழக்கில் மேலதிகமாக முப்பதினாயிரம் வாக்குகள் பா. அரியநேத்திரனின் சங்குச் சின்னத்துக்குக் கிடைத்திருந்தால் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு ஜனாதிபதியாகியுள்ள அநுர குமார திசாநாயாகாவை விட தமிழர் தாயகத்தில் சங்குச் சின்னம் முன்வைத்த கொள்கைக்குக் கூடுதலான அங்கீகாரம் இருப்பது வாக்குகள் ஊடாக உறுதிப்படுத்தப்படும் நிலை தோன்றியிருக்கும். சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியைக் கனதியாகச் சொல்ல முடிந்திருக்கும்.
செப். 25 18:34

ஈழத் தமிழர் தேசத்துக்குத் தனித்துவமான சமவுடைமை இயக்கம் காலத்தின் தேவை

(வவுனியா, ஈழம்) 'தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூதுகவ்வலுக்கு ஐரோப்பிய காலனித்துவம், குறிப்பாகப் பிரித்தானிய காலனித்துவம், அதன் தொடர்ச்சியாக நவகாலனித்துவமாக அமெரிக்காவுக்குக் கைமாறிய இரு துருவ, ஒரு துருவ உலக வல்லாதிக்க அரசியல் மட்டும் மூல காரணமல்ல. இந்தியத் துணைக் கண்டத்தில் மேலெழுந்துள்ள பிராந்திய மேலாதிக்கமும் முக்கியமான ஒரு காரணி. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புப் போர் மூலம் அழிக்கப்படுவதற்கு இவை அனைத்தும் துணைபோயின.
செப். 17 09:38

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்மறைத் தன்மைக்கு மாற்றாக முன்வைக்கப்படும் பொதுச்சபையின் நேரடித் தன்மை

(முல்லைத்தீவு, ஈழம்) ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாக எந்தக் கருத்துநிலையை முரசறைந்து வலியுறுத்துகிறார்கள் என்பது தென்னிலங்கைக்கும் உலக மட்டத்துக்கும் அவசியமானது. டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் என்று சலுகைகளை முன்னிலைப்படுத்தும் அரசியல் வியாதி ஒரு புறமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையைச் சீர்குலைத்து சுமந்திரன் முன்னெடுத்த சந்தர்ப்பவாத அரசியல் நோய் மறுபுறமுமாகக் காணப்பட்ட இருதலைக் கொள்ளி நிலையை விட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்மறையான ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு என்பதற்கும் பொதுச்சபையின் பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கும் இடையான புதிய இருதலைக் கொள்ளி நிலை உருவாகியுள்ளது.