எனினும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபடுமென சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான கட்சியின் மூத்த உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வேறொரு புதிய அரசியல் அணியாகச் செயற்பட முடியும் என்றும் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்தார். அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவாரென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட முன்னர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படுமென கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியலெ்ல கண்டியில் செய்தியாளரிடம் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெறவுள்ள பேரணி ஐக்கிய தேசியக் கட்சியினுடையதல்ல. அது அமைச்சர் சஜித் பிரேமதாச தனிப்பட்ட முறையில் நடத்தும் மக்கள் பேரணி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறுகின்றார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள், மலையகத் தமிழ்க் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களோடும் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
குறிப்பாக தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவா் இரா.சம்பந்தன். கட்சியின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ள ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குமாறும் கோரியுள்ளார்.