கூர்மையின் பார்வையில்
டிச. 02 23:15

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது- மோடி முன்னிலையில் நேரடியாகவே மறுத்தாரா கோட்டாபய

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைகளுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம் நேரடியாகவே கூறியதாகப் புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பின்போது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதாக, நரேந்திரமோடி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இருவருக்குமிடையிலான சந்திப்பு முடிவடைந்த பின்னர் புதுடில்லியில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்பாகவே நரேந்திரமோடி அவ்வாறு கூறியிருந்தார்.