இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடக்கு முறைக்கு மத்தியில்
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தகவல்
பதிப்பு: 2021 மார்ச் 07 13:24
புதுப்பிப்பு:
மார்ச் 08 10:39
பலத்த சர்ச்சைகள், பல இழுபறிகள் மற்றும் தொடர் போராட்டங்கள் நிபுணர்கள் பலரின் வாதப்பிரதி வாதங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்ந முஸ்லிம் ஜனாஸாக்கள் கிழக்கு மாகாணம் ஒட்டமாவாடியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் காகித நகர் எனும் கிராமசேவையாளர் பிரிவில் மஜ்மா நகர் எனும் பகுதியில் உள்ள சூடுபத்தின சேனை எனும் பகுதியிலேயே மேற்படி ஐனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாகக் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
>> மேலும் வாசிக்க
மார்ச் 06 21:27
(வவுனியா, ஈழம்)
வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ் மீனவக் கிராமமான தலை மன்னாரிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் உள்ள மணல் திட்டைகளை மீனவர்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாதென இலங்கை ஒற்றையாட்சி அரசின் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தடாலடியாகத் தெரிவித்துள்ளனர். ஏலவே மன்னார் மாவட்டத்தில் தமிழர்களுக்கு சொந்தமான பல ஏக்கர் காணிகளைச் சுவீகரித்துள்ள இலங்கை அரசின் வன ஜீவராசிகள் திணைக்களம் கடல் நடுவே உள்ள மணல் திட்டைகளைத் தற்பொழுது சொந்தம் கொண்டாடுவது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
மார்ச் 06 20:45
(வவுனியா, ஈழம்)
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விடயத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குச் சாதகமாகச் செயற்பட்டு வரும் அமெரிக்கா, வடமாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஈடாகப் பிறிதொரு கட்சியை உருவாக்க இரகசிய முயற்சி எடுத்ததாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின என்ற சிங்கள வாரஇதழ் இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காகக் கொழும்பில் இயங்கும் அமெரிக்காவின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் 500 மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டிருப்பதாகவும் திவயின வாரஇதழ் அம்பலப்படுத்தியுள்ளது. திவயின என்ற சிங்கள நாளேட்டின் ஞாயிறு வாரஇதழ் சனிக்கிழமை வெளியிடப்படுகின்றமை வழமையாகும்.
மார்ச் 05 09:23
(கிளிநொச்சி, ஈழம்)
இலங்கைத் தீவில் கொவிட் நோய் தொற்றினால் மரணமடைபவர்களை தமிழர் தாயகப் பிரதேசமான கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவிலேயே அடக்கம் செய்தல் வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ள நிலையில் அதனை ஆட்சேபித்து இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாகவும் இரணைதீவு மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் கொவிட் காரணமாக இறப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான அமைச்சரவை தீர்மானமொன்றை கடந்த செவ்வாய் இலங்கை அரசாங்கம் எடுத்திருந்தது.
மார்ச் 04 12:02
(யாழ்ப்பாணம், ஈழம்)
தமிழர்கள் வாழும் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்திலும் பாரிய குறைபாடுகள் நிலவி வரும் நிலையில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆட்சி செய்யும் ஸ்ரீ லங்கா பொது ஜனபெரமுன அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்யப் பொருத்தமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 12 கல்வி வலயங்கள் இயங்கி வரும் நிலையில் வகுப்பறை மற்றும் நிர்வாகக் கட்டிடங்கள் போதிய அளவு இல்லாததுடன் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் கணனி மற்றும் தகவல் தொடர்புத் தொழில் நுட்பவியல் பீடங்கள் போன்ற வசதிகளை அநேக பாடசாலைகளில் இலங்கை அரசாங்கம் இன்றுவரை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என வட மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
மார்ச் 03 12:43
(யாழ்ப்பாணம், ஈழம்)
தமிழ் மக்களின் தாயக பூமியான வடமாகாணம் யாழ் காங்கேசன் துறையிலிருந்து இந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவையை இவ்வருட நடுப்பகுதியில் ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். இந்தியா பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து இலங்கையின் வட மாகாணம் காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று இந்திய தலைநகர் புதுடில்லியில் கைச்சாத்திடப்பட்டது.
மார்ச் 02 16:45
(யாழ்ப்பாணம், ஈழம்)
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள போலியான குற்றச்சாட்டுக்களில் இருந்து இலங்கைப் படையினரைக் காப்பாற்றப் புதிய சட்டங்களை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார். முப்படையினரையும் காப்பாற்றக்கூடிய முறையில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை உருவாக்கவுள்ளதாகவும் தற்போதைய நிலையில் போதிய சட்டங்கள் இல்லையென்றும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.
மார்ச் 01 14:52
(மன்னார், ஈழம்)
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈபடுபட்டு வரும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் முரண்பாடுகள் மன்னார் மாவட்டத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் முரண்பாடுகள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுன கட்சியின் நான்காவது வருட சம்மேளன மாநாடு சென்ற சனிக்கிழமை மன்னாரில் நடைபெற்ற நிலையில் குறித்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதைப் புறக்கணித்துள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவிக்கின்றன.
பெப். 28 11:28
(மன்னார், ஈழம் )
தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் ஓலைத்தொடுவாயிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போன மூன்று தமிழ் மீனவர்களில் ஒருவர் மாலைதீவின் ஆட்கள் நடமாட்டம் அற்ற தீவில் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அத்தீவிலிருந்து ஒரு மீனவரின் சடலமொன்றையும் மாலைதீவுக் கடற்படையினர் மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தின் ஓலைத்தொடுவாய் பகுதியிலிருந்து கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி ஞாயிறு அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று தமிழ் மீனவர்கள் சுமார் இரண்டு வாரங்கள் கழிந்தும் மீண்டும் கரை திரும்பாத நிலையில் சக மீனவர்களும் உறவினர்களும் மன்னார் கடல் பிரதேசங்கள் எங்கும் அவர்களைத் தேடி வந்தனர்.
பெப். 27 13:54
(மன்னார், ஈழம் )
கொவிட் தொற்றினால் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் வர்த்தமானி பிரகடனம் சென்ற வியாழன் நள்ளிரவு ராஜபக்ச அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கைத் தீவில் வாழும் முஸ்லிம் மக்களின் பிறப்புரிமையை இன்னுமொரு நாட்டின் பிரதமர் கொழும்புக்கு வந்து வழங்கிய அழுத்தங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை நகைப்புக்கிடமானதென முஸ்லிம் மக்கள் பலர் கூறுகின்றனர். ஒரு சமுதாயத்தின் பிறப்புரிமையை ஏற்றுக்கொள்ளாத இலங்கை ஒற்றையாட்சி அரசு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொடுத்த அழுத்தங்களினாலேயே முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் அடக்கம் செய்ய அனுமதி வழங்கியதாகக் கூறப்படுவதும் கேள்விக்குரியதொன்றுதான்.