செய்தி: நிரல்
டிச. 21 04:22

இமாலயப் பிரகடனத்தை 69 சிவில் சமூக அமைப்புகள் நிராகரிப்பு

(திருகோணமலை ) சுரேன் சுரேந்திரன் என்பவர் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை என்ற தனிமனிதர் குழு, கொழும்பில் பௌத்த மகா சங்கங்களுடன் இணைந்து முன்வைத்த இமாலயப் பிரகடனத்தை அறுபத்தியொன்பது பொது அமைப்புகள் கூட்டாக நிராகரித்துள்ளன. திருகோணமலை ஆயர் கிறிஸ்ரியன் றோயர் இமானுவல், யாழ் ஆயர் இல்ல குருமுதல்வர் அருட்தந்தை பி.ஜே.யெபரட்ணம், திருகோணமலை தென்கையிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார், கொழும்பில் உள்ள இலங்கைத் திருஅவையின் யாழ் மாவட்ட குரு குமுதல்வர் அருட்தந்தை எஸ்.டி.பி.செல்வன் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்பட அறுபத்தியொன்பது சிவில் சமூக அமைப்புகளே இமாலயப் பிரகடனத்தை கூட்டாக நிராகரித்துள்ளன.
மே 18 08:22

சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி முளளிவாய்க்கால் பிரதேசத்தில் ஒன்றுகூடிய மக்கள்

தமிழ் இன அழிப்புக்கு நீதிகோரி வடக்குக் கிழக்குத் தாயக மக்கள் ஒன்றுதிரண்டு முள்ளிவாய்க்காலில் வணக்க நிகழ்வுகளில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை முற்பகல் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடிய மக்கள் தீபங்களை ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர். இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுகளை தாங்கிய ஊர்திப் பவனி கடந்த பண்ணிரெண்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
ஏப். 04 09:26

சஜித் அணியில் இருந்து மூவர் ரணில் அரசாங்கத்துக்குச் செல்வர்

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாகக் கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த போதும், அதனை சஜித் பிரேமதாச மறுத்திருந்தார். ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியான தகவல்களின் பிரகாரம் மூன்று உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரியவருகின்றது. பொருளாதார நிபுணரும் கொழும்பு மாவாட்ட உறுப்பினருமான ஹர்ஷா டி சில்வா, மற்றும் ஏரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகிய மூன்றுபேரும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன
மார்ச் 29 22:22

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு சஜித் அணி கோரிக்கை

(வவுனியா, ஈழம்) எரிபொருள் சந்தை தாராளமயமாக்கல், மத்திய வங்கி திருத்தச் சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் ஆகியவை தொடர்பாக எதிர்க்கருத்துக்களை முன்வைத்த சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மக்கள் அங்கீகாரம் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த உறுப்பினர்கள், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி புதிய அங்கீகாரத்தைப் பெற்றால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் விளக்கினர்.
மார்ச் 17 17:36

தொழிற்சங்கப் போராட்டங்கள் தற்காலிக நிறுத்தம்

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்தின் அடக்கு முறை நிறுத்தப்பட்டு அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் வரி நீக்கம் போன்றவற்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவிக்க மறுத்தால் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சாதகமாகப் பரிசீலிப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் உரிய பதில் இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக தொழிற் சங்க நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் பேச்சுவார்த்தையில் அனைத்துத் தரப்பினரும் பங்கொள்ள வேண்டும் எனவும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மார்ச் 10 17:57

தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சரத் வீரசேகர நியமனம்

(வவுனியா, ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகின்ற முன்னாள் இராணுவ அதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர இலங்கைத் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சர், நீதி அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து அமைச்சரவையில் முன்வைத்த கூட்டுப் பிரேரணையின் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 08 22:53

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டம்

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கமும் மோதலும் ஏற்பட்டது. களனி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் இன்று இரவு வரை தொடர்ந்ததால் பொலிஸார் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் பல மாணவர்கள் பலர் சிதறி ஓடினர். வேறு பல மாணவர்கள் பொலிஸாருடன் நேருக்கு நேராக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் செய்தனர்.
மார்ச் 07 09:42

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை சபையில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார். ஆனாலும் ஜெனீவா மனித உரிமைச் சபையுடன் இலங்கை தொடர்ந்து உரையாடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் இலங்கை தொடர்பான ஒவ்வொரு ஆண்டுக்குமான ஆறாவது காலகட்ட மீளாய்வு மார்ச் எட்டாம் ஒன்பதாம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
மார்ச் 02 21:23

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை இறுதி முடிவு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இறுதி முடிவு எடுக்கும் என்றும், அதன் பின்னர் அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் ஒன்பதாம் திகதி நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழு முன்னதாக கூறியிருந்தது. ஆனாலும் நிதி இல்லையென நிதியமைச்சின் செயலாளர் அறிவித்ததனால் தேர்தலை நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவிவித்திருந்து.
பெப். 28 09:17

மின் கட்டணம், வரி உயர்வுக்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டம்

(வவுனியா, ஈழம்) மின்சாரக் கட்டணம் அறுபத்து ஆறு வீதத்தினால் உயர்வடைந்துள்ளமை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமைக்கு மற்றும் வரி அதிகரிப்புக்கு எதிராக நாளை புதன்கிழமை கொழும்பில் அனைத்துத் தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அரச மற்றும் தனியார் வங்கிகள் தனியார் அரச மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் போராட்டம் தொடர்பாகத் தொழிற்சங்க அமைப்புகள் ஊடகங்களில் பகிரங்க அறிவிப்பு வெளியிடவில்;லை.