கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜூலை 01 13:50

கருவிலேயே தவறுகிறதா தமிழ்த் தேசியப் பேரவை முயற்சி? அதைக் காப்பாற்ற வழி ஏதும் உண்டா?

(முல்லைத்தீவு) ஈழத்தமிழர்களுக்கென்று தனியாக அடையாளப்படுத்தப்பட்ட மரபுவழித்தாயக உரிமையை அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வந்துள்ளார்கள். இது ஈழத்தமிழர் தேசியத்துவத்தின் முதலாவது அச்சாணி நிலைப்பாடு. ஒரு தனித்துவமான தேசிய இனமாகத் தமது அரசியல் வேணவாவை அவர்கள் முன்வைத்துப் போராடி வந்துள்ளார்கள் என்பது இரண்டாது அச்சாணி நிலைப்பாடு. மறுக்கப்படவொண்ணாத் தன்னாட்சியுரிமையின் அடிப்படையைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்கள் என்பது மூன்றாவது அச்சாணி அடிப்படை. இந்த மூன்று தூண்களுக்கும் அடுத்தபடியாக இரண்டு தூண்களாக மொத்தம் ஐந்து தூண்கள் அடிப்படையானவை. இந்த ஐந்து தூண்களையும் நினைவுபடுத்தி, தமிழ்த் தேசியப் பேரவை முயற்சி எதுவித கோப தாபங்களுக்கும் அப்பாற்பட்டு அணுகப்படவேண்டும்.
மே 29 16:20

ஈழத்தமிழரின் அரசியல் விடுதலைக் கருத்தியலும் பொது வேட்பாளரும் எவ்வாறு ஒத்திசையலாம்?

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின் தன்னாட்சியுரிமையுடனான இறைமைக் கோட்பாட்டைச் சிதைத்து உள்ளக விவகாரமாக மாற்றிவிடவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள் ஒரு புறமும் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களுடன் இரகசிய ஒப்பந்தங்களை ஒளித்து மேற்கொள்வதில் கைதேர்ந்த தமிழர்களின் தேசிய ஏமாற்றுக் கட்சிகள் மறுபுறமுமாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தெரிவில் ஈழத்தமிழர்களின் பொதுவேட்பாளர் முன்வைக்கவேண்டிய கருத்தியலை குட்டிச் சுவராக்கும் சிதைப்பு நடவடிக்கைகளைத் திரைமறைவில் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இந்தச் சிதைப்பைத் தாண்டிய நிலையில் பொதுவேட்பாளர் எனும் கருத்தியல் வெற்றிபெறவேண்டுமானால் நடக்கவேண்டியது என்ன என்ற கேள்விக்குத் துரிதமாக தெளிவான தெளிவுபடுத்தல் அவசியமாகிறது.
மார்ச் 09 21:09

ஜே.வி.பியின் பாவங்களைக் கழுவ முற்படும் சக்திகள்

(முல்லைத்தீவு, ஈழம்) ஜே.வி.பயின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா, கனடவுக்குப் பயணம் செய்யவுள்ளார். அவரைத் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் வரவேற்கவுள்ளதாக செய்திகளும் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. ஜே.வி.பி பற்றிய விம்பம் மிகச் சமீபகாலமாக அரசியல் நோக்கில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்தியாவுக்குச் சென்று வந்த பின்னர் ஜே.வி.பியின் பாவங்கள் கழுவப்படுகின்றன. போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சிலர் ஜே.வி.பி மீது நம்பிக்கை வைக்கிறார்கள் புதிய மாற்றம் என்று வேறு சிலர் புகழாரம் சூட்டுகிறார்கள். அனுரகுமார திஸாநாயக்க நல்லவர் வல்லவர் என்றும் சிலர் மார் தட்டுகிறார்கள். சிங்களவர்கள் ஜே.வி.பியை நம்புவதும் விசுவசிப்பதும் வேறு.
பெப். 19 20:27

கொழும்புச் சந்திப்பில் மறுத்த இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணததில் நடத்திய உரையாடல் எதற்காக?

(யாழ்ப்பாணம், ஈழம்) சிங்கள அரசியல் கட்சிகளையும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் சந்தித்து வரும் இந்தியா, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தனக்குரிய நலன்களை இலங்கையிடம் இருந்து பெற்று வரும் நிலையில் அல்லது அதற்கான பேரம் பேசல்களை நடத்திக் கொண்டு இலங்கைத்தீவை இந்தியாவின் மற்றொரு மாநிலமாகக் கருதுகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன. ஏற்கனவே இக்கேள்விகள் பலரிடமும் உண்டு. ஆனாலும், மிகச் சமீபகாலமாக அக் கேள்விகளை நிரூபிக்கும் வகையில் இலங்கைத்தீவு மீதுதான் இந்தியாவின் சுய நல அக்கறையைக் காண முடிகின்றது.
பெப். 12 21:29

டில்லி - ஜே.வி.பி உறவு ஈழத்தமிழர்களுக்குச் சொல்லும் செய்தி

(யாழ்ப்பாணம், ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமென இந்தியாவில் தூதுவராக இருந்த மிலிந்த மொறகொட கூறிய கருத்தை இந்தியா ஏற்றுள்ளது அனுரகுமார திஸாநாயக்காவை புதுடில்லிக்கு அழைத்துப் பேசியமை இதற்குச் சான்றாகவுள்ளது. தூதுவராகப் பதவியேற்பதற்கு முன்னரும் பதவியிலிருந்து விலகி கொழும்புக்கு வந்த பின்னரும் பதின்மூன்றை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் மாகாண சபைகள் முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றும் மிலிந்த மொறொகொட கூறியிருந்தார். அனுரகுமார திஸாநாயக்காவை புதுடில்லிக்கு அழைத்துப் பேசியிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மூன்று பிரதான கருத்துக்களை ஜே.வி.பி ஏற்க வேண்டும் என வலியுறுத்திருக்கிறார்.
ஜன. 29 21:38

காசா இன அழிப்புப் போர் குறித்த இடைக்காலத் தீர்ப்புச் சொல்லும் செய்தி

காசாவில் நடந்து கொண்டிருக்கும் போரில் இழைக்கப்படும் குற்றங்களை இன அழிப்பைத் தடுப்பதற்கான உலகளாவிய நீதிச் சட்டகத்தின் ஊடாக சர்வதேச நீதிமன்றம் கையாள வேண்டும் என்றும் இன அழிப்பில் இஸ்ரேல் ஈடுபட்டிருப்பது விசாரிக்கப்படவேண்டியது என்றும் தென்னாபிரிக்கா முன்வைத்த வழக்கின் நியாயாதிக்கம் நம்பத்தகுந்ததாக இருப்பதாகவும் நீதிமன்றம் கருதி, அதன் அடிப்படையில் இடைக்காலத் தடையுத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று சட்ட அறிஞர்களும் மனிதாபிமான சமூகத்தினரும் வரவேற்றுள்ளனர். இஸ்ரேல் தான் செய்வது இன அழிப்பு அல்ல என்று மறுத்துரைத்துள்ளது.
ஜன. 26 14:37

கருத்துச் சுதந்திரமா? அது கிரிமினல் குற்றம்

(மட்டக்களப்பு, ஈழம்) அரசாங்கத்தால் அவசரமாக முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தின் ஆபத்துக்களை ஊடக அமைப்புகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியபோதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதனைச் செவிமடுக்கும் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 12 (1) ஆவது சரத்தை வெவ்வேறு வழிகளில் மீறுவதற்கு இடமளிக்கக்கூடும் என்று ஊடக அமைப்புகள் எச்சரித்துள்ளன. இணையப் பாதுகாப்பு எனப்படும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மீறும் ஒருவர் கிரிமினல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆபத்தும் உண்டு.
ஜன. 14 11:28

சர்வதேச நீதிமன்ற விவகாரம் - நுட்பமாக கையாளும் இலங்கை

(கிளிநொச்சி, ஈழம்) காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளதை அமெரிக்கா கண்டித்திருக்கிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் காசாவில் நடக்கும் தாக்குதல்களைக் கண்டிப்பதுடன் இஸ்ரேல் அரசு மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. காசாவில் தொடரும் உயிரிழப்புகள் ஏற்க முடியாதவை என நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா அறிவித்துள்ளது. பலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை தெரிவித்து உரையாற்றும் போது இந்தியாவின் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஜன. 06 16:14

காசாவில் இன அழிப்பு - சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா மனு

(வவுனியா, ஈழம்) பலஸ்தீன மக்கள் மீது இன அழிப்பு நடைபெறுவதாகவும் அந்தப் பெரும் சர்வதேசக் குற்றத்துக்கு இஸ்ரேலின் அரச பொறுப்பு விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் காசா மீது மேற்கொண்டுள்ள படையெடுப்பை உடனடியாக விலத்திக்கொள்ளும் ஆணையையும் பிறப்பிக்கவேண்டும் என்றும் கோரி தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ள வரலாற்று முக்கியத்துவமான சர்வதேசச் சட்ட நகர்வு டிசம்பர் 29 ஆம் திகதியன்று நடைபெற்றுள்ளது. எண்பத்து நான்கு பக்கங்கள் நீளமான தென்னாபிரிக்காவின் குற்றப்பத்திரிகை கிடைத்துள்ளதை சர்வதேச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது மட்டுமல்ல, உடனடி நடவடிக்கை தொடர்பான பகிரங்க இரண்டு நாள் அமர்வுகளை ஜனவரி 11 ஆம் 12 ஆம் திகதிகளில் நடாத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
டிச. 03 05:23

கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லிச் சந்திப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திப்பதில்லை. நாடாளுமன்ற விவாதங்களில் ஒவ்வொரு விடயதானங்களிலும், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மாத்திரமே உரையாற்றுவர். எல்லா விடயங்களையும் எல்லா உறுப்பினர்களும் தாம் நினைத்தபாட்டிற்குப் பேச முடியாது. தேர்தலில்கூட போட்டியிடும் உறுப்பினர்கள் கட்சியின் சின்னத்தை மாத்திரமே பிரச்சாரப்படுத்துவர்.