முல்லைத்தீவில் இரவு நேரத்தில் வீடுகளுக்கு வரும் புலனாய்வுப் பொலிஸார் தமது போராட்டம் தொடர்பாகக் கேட்டு அச்சுறுத்துவதைக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் இன்று வியாழக்கிழமை துக்க தினம் அனுஸ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தின்போது அதிகளவான புலனாய்வுப் பொலிஸார் போரட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைப் படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தியதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
போரில் ஏராளமான சிறுவர்கள் கொல்லப்பட்டதாலேயே இன்றைய சிறுவர் தினத்தை துக்க நாளாக அனுஷ்டித்ததாகவும் இதனாலேயே புலனாய்வுத் துறையினர் தம்மைக் கண்காணித்திருக்கலாமெனவும் அவர் கூறினார்.
பாரிய அச்சறுத்தல், மிரட்டல்கள் மத்தியில் காணாமல் ஆக்கப்ட்ட தமது பிள்ளைகளைத் தேடியும் நீதிகோரியும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்திய வருவதாகவும் இவ்வாறான அச்சறுத்தல்கள் தொடர்பாக இலங்கைப் பொலிஸாரிடம் முறையிட்டுப் பயனில்லையெனவும் அவர் கூறினார்.