முக்கியமான இராஜதந்திரி ஒருவரின் ஆலோசனைக்கு அமைவாகவே மகிந்த ராஜபக்சவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் முடிவை கோட்டாபய மாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரே ஆளும் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. இதேவேளை, கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் சிலர் இன்றிரவு முக்கியமான சிங்கள அரசியல் தலைவர்கள் பலரை இரகசியமாகச் சந்தித்து உரையாடியதாகவும் உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியளிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டதாகவும் தெரியவருகின்றது.