கொழும்புக்கு அப்பால் உள்ள கடற் பிரதேசத்தில் இந்த கப்பலுடன், இலங்கையின் கடற்படை அதிகாரிகள் போர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவே செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனாலும் இலங்கைக்கு அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு கடற்படை கப்பல்கள், இலங்கையில் இருந்து வெளியேறும் போது இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுவது வழமையான நடவடிக்கை என்றும் இலங்கைக் கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனக் கப்பலைத் தனது கடற் பிரதேசத்தில் நிறுத்த இலங்கை அரசாங்கம் அனுமதித்ததை அடுத்து, எழும் எந்தவொரு சவால்களையும் சமாளிக்க இந்தியா தயாராக இருப்பதாக இந்தியாவின் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், இந்தியக் கடற்படை எந்தவிதமான சவால்களையும் எதிர்கொள்ளும் என்றும். மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் கூறினார்.