எனினும், இலங்கைத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தொடர்ச்சியாகத் தடை விதித்து வருகின்றனர். வெடு்க்குநாறி மலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அங்குள்ள ஆதிசிவன் ஆலயத்தை புணர்நிர்மானம் செய்யக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு வெளியிட்டே மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், இலங்கைத் தெல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
தமது பாரம்பரிய வெடுக்குநாறி மலையில் புத்தர் சிலையை வைக்கும் நோக்கில் அதிகாரிகள் செயற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சந்தேகம் வெளியிட்டனர்.
தமது பூர்வீக நிலத்திற்குச் சென்று வருவதை இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் தடுக்க முடியாது என்றும் பௌத்ததேசிய பேரினவாத நோக்கில் செயற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.
வவுனியா நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என இலங்கைத் தொல்பொருட் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் வெளியிட்டிருந்தார்.
ஆனாலும், தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.