மீட்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட 95 மனித எலும்புக்கூடுகளும் மன்னார் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பைகளில் இலக்கிடப்பட்டு பொதிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, மன்னாரில் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஏற்ற முறையில் வளாகத்தின் முன் பகுதி முழுவதும் தார்ப்பால் இடப்பட்டு மூடப்பட்டுள்ளன.
சட்ட மருத்துவ அதிகாரி ராஜபக்ச தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்சோம தேவா குழுவினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் நாநுாற்றி நாற்பது பொதிகளில் அடைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ஏலவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.