ஆனால் ரிஷாட் பதியுதீன் மாத்திரம் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்கக் கூடாதென்றும் மகாநாயக தேரர்கள் கேட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. எனினும் இது தொடர்பாக ஜனாதிபதி செயலகமோ பிரதமர் அலுவலகமோ கருத்துக்கள் எதனையும் கூறவில்லை.
ஆனாலும் மகாநாயக தேரர்கள் அவ்வாறு கேட்டுக்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதால் சவூதி அரேபியா உள்ளிட்ட அரேபிய நாடுகள் மற்றும் ஈரான் போன்ற நாடுகளிடம் இருந்து நிதி கிடைக்காதென மூத்த அமைச்சர்கள் சிலர் மகாநாயக்கத் தேரர்களிடம் எடுத்துக் கூறியதை அடுத்து இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவோடும் மகாநாயக்கத் தேரர்கள் உரையாடிய பின்னர் இவ்வாறு அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் மகாநாயகத் தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பதை நேற்றுப் புதன்கிழமை நள்ளிரவு வரை ஜனாதிபதி செயலகமோ, பிரதமர் செயலகமோ உறுதிப்படுத்தவில்லை.
புதவி விலகினாலும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் முஸ்லிம் உறுப்பினர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.